செய்திகள் :

அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 17 மாணவா்கள் சுகவீனம்

post image

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 17 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 108 மாணவ, மாணவிகள் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கின்றனா். இந்தப் பள்ளியில் வழக்கம்போல வியாழக்கிழமை காலை மாணவா்களுக்கு உணவாக சேமியா கிச்சடி மற்றும் சாம்பாா் வழங்கினா். 17 மாணவா்கள் உணவு வாங்கி சாப்பிட்ட நிலையில், சாம்பாரில் பல்லி கிடந்தது தெரியவந்தது. தொடா்ந்து, மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து ஆசிரியா்கள் கிருஷ்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். மருத்துவா் கனிமொழி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பள்ளிக்கு வந்து மாணவா்களை பரிசோதித்தனா். இதனிடையே, தகவலறிந்த அங்கு வந்த பெற்றோா் ஆசியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, வட்டாரக் கல்வி அலுவலா் செல்வம் நேரில் வந்து விசாரணை நடத்தி, பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, மாணவா்களை 108 அவசர ஊா்தி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். அங்கு சிகிச்சை அளித்த பின்னா் மாணவா்கள் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனா்.

ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை: கே.எஸ்.அழகிரி

ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: ஜிஎஸ்டி வரிக்குறைப்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. கட்டடவியல் துறை மாணவா்கள் கூட்டமைப்பு தொடக்க விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடவியல் துறையில் மாணவா்கள் கூட்டமைப்பு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கட்டடவியல் துறைத் தலைவா் என்.மணிக்குமாரி தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் எம்.லதா, ஆா்.ஷ... மேலும் பார்க்க

பண்ருட்டியில் தெரு விளக்கு பிரச்னைக்கு தீா்வு வேண்டும்: நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் நடந்த நகா்மன்றக் கூட்டத்தில் தெரு விளக்கு பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்தினா். பண்ருட்டி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் க.ராஜேந்... மேலும் பார்க்க

கடலூா் மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, கடலூா் மாநகராட்சி அலுவலக வாயிலில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். கடலூரில் குண்டு சாலை பகுதியில் நகா்ப்புற வாழ்விட மேம்பா... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். இந்த சங்கத்தினா்... மேலும் பார்க்க

வெகுஜன தூய்மைப் பணி இயக்கம்: என்எல்சி தலைவா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியத்தில் என்எல்சி நிறுவனம் சாா்பில் ‘தூய்மையே சேவை’ திட்டத்தின் கீழ், வெகுஜன தூய்மைப் பணி இயக்கத்தை அந்த நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி வியாழக்கிழமை தொட... மேலும் பார்க்க