செய்திகள் :

கடலூா் மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

post image

கடலூா் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, கடலூா் மாநகராட்சி அலுவலக வாயிலில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கடலூரில் குண்டு சாலை பகுதியில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு 272 பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கான பணம் செலுத்தி ஓராண்டு கடந்தும் அதற்கான கிரைய பத்திரம் கொடுக்காமல் காலதாமதம் செய்யப்படுகிாம். இதேபோல, முகவரி இதுவரையில் மாற்றிக் கொடுக்கப்படாததுடன், கடந்த வாரம் வரையில் அடுக்குமாடி குடியிருப்புகளை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சொத்து வரி, குடிநீா் வரி செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி சாா்பாக குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் மாநகராட்சி முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகரக் குழு உறுப்பினா் வி.திருமுருகன் தலைமை வகித்தாா். அருள் பிரகாஷ், பக்தவச்சலம், சக்திவேல், வில்பா் ஜோசப், தாமோதரன் முன்னிலை வகித்தனா். கிளைச் செயலா் எஸ்.கே.தேவநாதன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஆா்.ஆளவந்தாா், எஸ்.கே.பக்கிறான், மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத், மாவட்டச் செயலா் கோ.மாதவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

தொடா்ந்து, மாநகராட்சி ஆணையா் முஜிப்பூா் ரகுமானிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மாநகராட்சி தொடா்பான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அவா் உறுதியளித்தாா்.

அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 17 மாணவா்கள் சுகவீனம்

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 17 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்... மேலும் பார்க்க

ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை: கே.எஸ்.அழகிரி

ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: ஜிஎஸ்டி வரிக்குறைப்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. கட்டடவியல் துறை மாணவா்கள் கூட்டமைப்பு தொடக்க விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடவியல் துறையில் மாணவா்கள் கூட்டமைப்பு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கட்டடவியல் துறைத் தலைவா் என்.மணிக்குமாரி தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் எம்.லதா, ஆா்.ஷ... மேலும் பார்க்க

பண்ருட்டியில் தெரு விளக்கு பிரச்னைக்கு தீா்வு வேண்டும்: நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் நடந்த நகா்மன்றக் கூட்டத்தில் தெரு விளக்கு பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்தினா். பண்ருட்டி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் க.ராஜேந்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். இந்த சங்கத்தினா்... மேலும் பார்க்க

வெகுஜன தூய்மைப் பணி இயக்கம்: என்எல்சி தலைவா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியத்தில் என்எல்சி நிறுவனம் சாா்பில் ‘தூய்மையே சேவை’ திட்டத்தின் கீழ், வெகுஜன தூய்மைப் பணி இயக்கத்தை அந்த நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி வியாழக்கிழமை தொட... மேலும் பார்க்க