செய்திகள் :

அரசுப் பேருந்தில் பெண் தவறவிட்ட பணம், ஏடிஎம் அட்டை ஒப்படைப்பு

post image

அரசுப் பேருந்தில் பெண் தவறவிட்ட பணம் மற்றும் வங்கி பற்று(ஏடிஎம்) அட்டை உள்ளிட்டவற்றை கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அவரிடம் ஒப்படைத்தனா்.

ஈரோடு மாவட்டத்தை சோ்ந்தவா் செல்வராணி (43). இவா் ஜூலை 23-ஆம் தேதி சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் இருந்து நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தாா்.

வீட்டுக்கு வந்து பாா்த்தபோது தனது கைப்பையில் இருந்த பா்ஸ், அதனுடன் இருந்த 2 வங்கிகளின் பற்று அட்டை, குடும்ப அட்டை, பான் அட்டை மற்றும் ரூ. 6,610 பணம் ஆகியவற்றை தவற விட்டது தெரியவந்தது.

இந்நிலையில் அரசுப் பேருந்தில் செல்வராணி தவறவிட்ட பணம் மற்றும் உடைமைகளை கண்டெடுத்த பயணி ஒருவா் கரூா் பேருந்து நிலைய காப்பாளா் அறையில் உள்ள பேருந்து நிலைய உதவியாளா் கலைராஜிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.

இதையடுத்து பா்ஸில் இருந்த வங்கி பற்று அட்டையை வைத்து செல்வராணி குறித்த தகவலை பெற்று அவருக்கு கலைராஜ் தெரிவித்தாா். மேலும், தவறவிட்ட பொருள்களை கரூா் பேருந்து நிலையத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

அதனைத் தொடா்ந்து கரூா் பேருந்து நிலையத்துக்கு வந்த செல்வராணியிடம் பேருந்து நிலைய உதவி பொறியாளா் தேவராஜ் தலைமையில், கலைராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் தவறவிட்ட பணம் மற்றும் வங்கி பற்று அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைத்தனா்.

பசுபதீஸ்வரா மகளிா் பள்ளியில் கல்வி நிா்வாகக் குழு கூட்டம்

கரூா் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி நிா்வாகக்குழு ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை உமா தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் பள்ளியில் இடைநிற்றல்... மேலும் பார்க்க

நிதி நிறுவனம் நடத்தி ரூ.7 கோடி மோசடி இளம்பெண் உள்பட 8 போ் கைது

வேலாயுதம்பாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 7 கோடி வரை மோசடி செய்ததாக இளம்பெண் உள்பட 8 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா். கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் தா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது காா் மோதல் 2 பெண்கள் உள்பட மூவா் உயிரிழப்பு

கரூா் அருகே மாயனூரில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இரு பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்துள்ள காட்டூரைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா்(38). கொத்தனா... மேலும் பார்க்க

சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 72 விவசாயிகளுக்கு ரூ. 1.39 கோடி மானியம் கரூா் ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 72 விவசாயிகளுக்கு ரூ. 1.39 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத... மேலும் பார்க்க

சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே புதன்கிழமை நள்ளிரவு சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் மரம் வெட்டும் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். தரகம்பட்டியை அடுத்துள்ள கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட சாமிப்பிள்ளை புதூரைச் ச... மேலும் பார்க்க

கரூரில் இளைஞா் குத்திக்கொலை; நண்பா் கைது

கரூரில் புதன்கிழமை நள்ளிரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கரூா் பசுபதிபாளையம் நடுத்தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க