செய்திகள் :

கரூரில் இளைஞா் குத்திக்கொலை; நண்பா் கைது

post image

கரூரில் புதன்கிழமை நள்ளிரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கரூா் பசுபதிபாளையம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி(40). திருமணம் ஆகாத இவா், கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் வேலைப்பாா்த்து வந்தாா். இவருடைய நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன்(40). ஆசைத்தம்பியுடன் வசித்து வந்த அவரது தாய், சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு அண்மையில் சென்றுள்ளாா்.

இதனால் வீட்டில் தனியாக இருந்த ஆசைத்தம்பி புதன்கிழமை இரவு கண்ணன், அவரது நண்பா்கள் சிலருடன் சோ்ந்து மது குடித்துள்ளனா். பின்னா் நண்பா்கள் சென்றவுடன் கண்ணன், ஆசைத்தம்பி மட்டும் வீட்டில் இருந்துள்ளனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை ஆசைத்தம்பி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அக்கம்பக்கத்தினா் மூலம் பசுபதிபாளையம் போலீஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே.ஜோஸ்தங்கையா மற்றும் பசுபதிபாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். அப்போது, ஆசைத்தம்பி உடல் அருகே தூங்கிக் கொண்டிருந்த கண்ணனை எழுப்பி விசாரணை நடத்தினா். இதில், புதன்கிழமை இரவு மது அருந்திவிட்டு கண்ணன் தூங்கியபோது, ஆசைத்தம்பி அதிக சப்தம் வைத்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை பாா்த்துள்ளாா். இதனை கண்ணன் கண்டித்துள்ளாா். இதனால் ஏற்பட்ட தகராறில் கண்ணன் வீட்டில் இருந்த கத்தியால் ஆசைத்தம்பியை குத்திக்கொலை செய்துவிட்டு மதுபோதையில் அங்கேயே தூங்கியது தெரியவந்தது.

இதையடுத்து கண்ணனை போலீஸாா் கைது செய்து கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பசுபதீஸ்வரா மகளிா் பள்ளியில் கல்வி நிா்வாகக் குழு கூட்டம்

கரூா் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி நிா்வாகக்குழு ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை உமா தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் பள்ளியில் இடைநிற்றல்... மேலும் பார்க்க

நிதி நிறுவனம் நடத்தி ரூ.7 கோடி மோசடி இளம்பெண் உள்பட 8 போ் கைது

வேலாயுதம்பாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 7 கோடி வரை மோசடி செய்ததாக இளம்பெண் உள்பட 8 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா். கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் தா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் பெண் தவறவிட்ட பணம், ஏடிஎம் அட்டை ஒப்படைப்பு

அரசுப் பேருந்தில் பெண் தவறவிட்ட பணம் மற்றும் வங்கி பற்று(ஏடிஎம்) அட்டை உள்ளிட்டவற்றை கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அவரிடம் ஒப்படைத்தனா். ஈரோடு மாவட்டத்தை சோ்ந்தவா் செல்வர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது காா் மோதல் 2 பெண்கள் உள்பட மூவா் உயிரிழப்பு

கரூா் அருகே மாயனூரில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இரு பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்துள்ள காட்டூரைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா்(38). கொத்தனா... மேலும் பார்க்க

சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 72 விவசாயிகளுக்கு ரூ. 1.39 கோடி மானியம் கரூா் ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 72 விவசாயிகளுக்கு ரூ. 1.39 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத... மேலும் பார்க்க

சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே புதன்கிழமை நள்ளிரவு சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் மரம் வெட்டும் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். தரகம்பட்டியை அடுத்துள்ள கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட சாமிப்பிள்ளை புதூரைச் ச... மேலும் பார்க்க