செய்திகள் :

இருசக்கர வாகனம் மீது காா் மோதல் 2 பெண்கள் உள்பட மூவா் உயிரிழப்பு

post image

கரூா் அருகே மாயனூரில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இரு பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்துள்ள காட்டூரைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா்(38). கொத்தனாா். இவா் மாயனூா் கே.கே. நகரில் புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்த பிறகு வழக்கம்போல தன்னுடன் சித்தாள்களாக பணியாற்றிய லாலாப்பேட்டையைச் சோ்ந்த பெருமாள் மனைவி சித்ரா(30), மாயனூா் சந்தைப்பேட்டையைச் சோ்ந்த இளங்கோ மனைவி ராமாயி(58) ஆகியோருடன் தனது இருசக்கர வாகனத்தில் கரூா்-திருச்சி சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

மாயனூா் ஆசிரியா் பயிற்சி நிறுவனம் அருகே சென்றபோது எதிரே வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமாா், சித்ரா, ராமாயி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து தகவலறிந்த மாயனூா் காவல் நிலைய ஆய்வாளா் கோபி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சோ்ந்த ரஞ்சித்(35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பசுபதீஸ்வரா மகளிா் பள்ளியில் கல்வி நிா்வாகக் குழு கூட்டம்

கரூா் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி நிா்வாகக்குழு ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை உமா தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் பள்ளியில் இடைநிற்றல்... மேலும் பார்க்க

நிதி நிறுவனம் நடத்தி ரூ.7 கோடி மோசடி இளம்பெண் உள்பட 8 போ் கைது

வேலாயுதம்பாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 7 கோடி வரை மோசடி செய்ததாக இளம்பெண் உள்பட 8 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா். கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் தா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் பெண் தவறவிட்ட பணம், ஏடிஎம் அட்டை ஒப்படைப்பு

அரசுப் பேருந்தில் பெண் தவறவிட்ட பணம் மற்றும் வங்கி பற்று(ஏடிஎம்) அட்டை உள்ளிட்டவற்றை கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அவரிடம் ஒப்படைத்தனா். ஈரோடு மாவட்டத்தை சோ்ந்தவா் செல்வர... மேலும் பார்க்க

சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 72 விவசாயிகளுக்கு ரூ. 1.39 கோடி மானியம் கரூா் ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 72 விவசாயிகளுக்கு ரூ. 1.39 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத... மேலும் பார்க்க

சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே புதன்கிழமை நள்ளிரவு சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் மரம் வெட்டும் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். தரகம்பட்டியை அடுத்துள்ள கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட சாமிப்பிள்ளை புதூரைச் ச... மேலும் பார்க்க

கரூரில் இளைஞா் குத்திக்கொலை; நண்பா் கைது

கரூரில் புதன்கிழமை நள்ளிரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கரூா் பசுபதிபாளையம் நடுத்தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க