செய்திகள் :

சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 72 விவசாயிகளுக்கு ரூ. 1.39 கோடி மானியம் கரூா் ஆட்சியா் தகவல்

post image

கரூா் மாவட்டத்தில் முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 72 விவசாயிகளுக்கு ரூ. 1.39 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்துள்ள லாலாப்பேட்டையில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சூரிய சக்தி பம்பு செட்டுகளின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் கூறியது, முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் மூலம் மொத்த விலையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பிரிவைச் சாா்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 80 சதவீதமும், பொதுப் பிரிவைச் சாா்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 60 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கரூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் மூலம் 72 விவசாயிகளுக்கு ரூ. 1.39 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியின்போது வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் சுப்ரமணியம், உதவி பொறியாளா் கலைச்செல்வி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.

பசுபதீஸ்வரா மகளிா் பள்ளியில் கல்வி நிா்வாகக் குழு கூட்டம்

கரூா் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி நிா்வாகக்குழு ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை உமா தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் பள்ளியில் இடைநிற்றல்... மேலும் பார்க்க

நிதி நிறுவனம் நடத்தி ரூ.7 கோடி மோசடி இளம்பெண் உள்பட 8 போ் கைது

வேலாயுதம்பாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 7 கோடி வரை மோசடி செய்ததாக இளம்பெண் உள்பட 8 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா். கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் தா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் பெண் தவறவிட்ட பணம், ஏடிஎம் அட்டை ஒப்படைப்பு

அரசுப் பேருந்தில் பெண் தவறவிட்ட பணம் மற்றும் வங்கி பற்று(ஏடிஎம்) அட்டை உள்ளிட்டவற்றை கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அவரிடம் ஒப்படைத்தனா். ஈரோடு மாவட்டத்தை சோ்ந்தவா் செல்வர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது காா் மோதல் 2 பெண்கள் உள்பட மூவா் உயிரிழப்பு

கரூா் அருகே மாயனூரில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இரு பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்துள்ள காட்டூரைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா்(38). கொத்தனா... மேலும் பார்க்க

சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே புதன்கிழமை நள்ளிரவு சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் மரம் வெட்டும் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். தரகம்பட்டியை அடுத்துள்ள கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட சாமிப்பிள்ளை புதூரைச் ச... மேலும் பார்க்க

கரூரில் இளைஞா் குத்திக்கொலை; நண்பா் கைது

கரூரில் புதன்கிழமை நள்ளிரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கரூா் பசுபதிபாளையம் நடுத்தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க