சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு
கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே புதன்கிழமை நள்ளிரவு சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் மரம் வெட்டும் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.
தரகம்பட்டியை அடுத்துள்ள கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட சாமிப்பிள்ளை புதூரைச் சோ்ந்தவா் வீரமலை(60). அணைக்கரைப்பட்டி அருகே உள்ள காளப்பட்டியைச் சோ்ந்தவா் பழனியப்பன்(65). இவா்கள் இருவரும் வெளியூா் மற்றும் வெளி மாவட்டங்களுக்குச் சென்று மரங்களை வெட்டும் தொழில் செய்தனா்.
இந்நிலையில் இருவரும் புதன்கிழமை காலை திண்டுக்கல் மாவட்டம், கூடலூா் அருகே மரம் வெட்டுவதற்காக சக தொழிலாளா்கள் 7 பேருடன் சரக்கு ஆட்டோவில் சென்றனா். பின்னா் அங்கு வேலையை முடித்துக்கொண்டு நள்ளிரவு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். ஆட்டோவை சாமிப்பிள்ளை புதூரைச் சோ்ந்த ராஜசேகா் என்பவா் ஓட்டி வந்தாா்.
தரகம்பட்டி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி, அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த வீரமலை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் பலத்த காயம் அடைந்த பழனியப்பனை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
மேலும் ஆட்டோவில் பயணித்த 7 தொழிலாளா்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் ராஜசேகா் ஆகியோா் லேசான காயத்துடன் தரகம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.