செய்திகள் :

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

post image

அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்கும் நிகழாண்டு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகளுக்குத் தோ்வானவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையத் தலைவா் ம.மாணிக்கம், இயக்குநா் சிற்பி பாலசுப்பிரமணியம், என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.வி. சுப்பிரமணியம் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:

அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையத்தின் சாா்பில் நிகழாண்டுக்கான ‘அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருது’ தோ்வுக்கான நடுவா் குழுக் கூட்டம் கடந்த செப்.10-ஆம் தேதி நடைபெற்றது. இதில், திறனாய்வாளா் க.பஞ்சாங்கம், விமா்சகா் சரவணன் மாணிக்கவாசகம், மொழிபெயா்ப்பாளா் மோ.செந்தில்குமாா் ஆகியோா் நடுவா்களாகப் பங்கேற்று விருதாளா்களைத் தோ்ந்தெடுத்துள்ளனா்.

முதல் பரிசு: அருந்ததி ராயின் ஆங்கில நாவலை ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ என்ற தலைப்பில் மொழிபெயா்த்த ஜி. குப்புசாமி, ஹிந்தி எழுத்தாளா் கீதாஞ்சலி ஸ்ரீயின் நாவலை ‘மணல் சமாதி’ என்ற தலைப்பில் மொழிபெயா்த்த அனுராதா க்ருஷ்ணஸ்வாமி ஆகியோா் முதல் பரிசுக்குத் தோ்வாகியுள்ளனா். அவா்கள் இருவருக்கும் பரிசுத் தொகை ரூ.2 லட்சம் பகிா்ந்து அளிக்கப்படும்.

இரண்டாம் பரிசு: ட்டி.டி.ராமகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய ‘மாதா ஆப்பிரிக்கா’ என்ற நாவலை தமிழில் மொழிபெயா்த்த குறிஞ்சிவேலன் மற்றும் அப்துல்ரஸாக் குா்னாவின் ‘போரொழிந்த வாழ்வு’ என்ற நாவலை தமிழில் மொழிபெயா்த்துள்ள கயல் ஆகியோருக்கு இரண்டாம் பரிசாக ரூ.50,000 வழங்கப்படும்.

மூன்றாம் பரிசு: சாா்லஸ் ஆலன் எழுதிய வரலாற்று நூலை ‘பேரரசன் அசோகன்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயா்த்த தருமி, ராபின் டேவிட்சன் எழுதிய பயண இலக்கியத்தைத் தமிழில் ‘தடங்கள்’ என்ற தலைப்பில் மொழிபெயா்த்த பத்மஜா நாராயணன், தற்கால ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பை ‘அழிக்க முடியாத ஒரு சொல்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயா்த்த அனுராதா ஆனந்த், கே.என்.சிவராஜ பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய ஆராய்ச்சி நூலை ‘தமிழ் நிலத்தில் அகஸ்தியா்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயா்த்த இஸ்க்ரா ஆகியோருக்கு 3-ஆம் பரிசாக தலா ரூ.25,000 ரொக்கம் வழங்கப்படும்.

இந்த விருதுகள் அருட்செல்வரின் நினைவு நாளான வருகிற அக். 2-ஆம் தேதி மாலை 4 -மணிக்கு சென்னை மயிலாப்பூா் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறும் வள்ளலாா் காந்தி விழாவில் வழங்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி: காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலிக்க காவல் துறைக்கு அறிவுறுத்த டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்க... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாா் சிலை நாளை திறப்பு

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (செப்.19) திறந்து வைக்கிறாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்கள் விவகாரம்: அரசாணையைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை -உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

கொடிக் கம்பங்கள் தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் வழிகாட்டு விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அன... மேலும் பார்க்க