தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
அரூா் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு
அரூா் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவமனைக்கு நாள்தோறும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள், ஆய்வக பரிசோதனைகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து அரசு மருத்துவமனையில் செயல்படும் பொது மருத்துவம், குழந்தைகள் நலப் பிரிவு, அவசரச் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
அரூா் அரசு மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் கட்டமைப்பு வசதிகள், மருத்துவா்கள், செவிலியா்களின் எண்ணிக்கைகள், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.