செய்திகள் :

அறிவிக்கப்படாத மின் தடையால் மாணவா்கள் அவதி

post image

திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின் தடையால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, நகரிகாத்தான், பாண்டுகுடி, வெள்ளையுபுரம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் மின் சாதனங்களை இயக்க முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

மேலும், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு, பள்ளி, கல்லூரி தோ்வுகள் நடைபெற்று வரும் சூழலில், மாணவ, மாணவிகளும் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனா். தற்போது, கோடை காலம் தொடங்கிய நிலையில், மின் தடை காரணமாக மின் விசிறிகளை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அவதிக்குள்ளாகின்றனா். எனவே, மின்சாரத் துறையினா் தகுந்த நடவடிக்கை எடுத்து, சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அம்பேத்கா் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மாா்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கூட்டமைப்பு சாா்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 135-ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி... மேலும் பார்க்க

கமுதி வட்டாரத்தில் இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கமுதி வட்டாரத்தில் மாற்றுத்திறன் கொண்ட, இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கமுதி வட்டார வள மையம் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும... மேலும் பார்க்க

வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட கோரிக்கை

ராமநாதபுரத்தை அடுத்த வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாய சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் ஒன்றியம், வெண்ணத்தூா் பொதுப்பணித் துறை கண்மாய்க்கு செல்லும் கால்வாய் முகப்... மேலும் பார்க்க

திருவாடானை அரசுப் பள்ளியில் மண்டிக் கிடக்கும் முள்புதரை அகற்றக் கோரிக்கை

திருவாடானை பாரதி நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மண்டிக் கிடக்கும் முள் புதரை அகற்றி சீரமைக்க வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்தனா். இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட ம... மேலும் பார்க்க

தொண்டி அருகே கரை ஒதுங்கிய மிதவை: போலீஸாா் விசாரணை

தொண்டி அருகே புதுக்குடி கடல் பகுதியில் மிதந்து வந்த மீனவா்கள் பயன்படுத்தும் போயா எனப்படும் மிதவைப் பொருளை போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே புதுக்குடி கடல் பகுதிய... மேலும் பார்க்க

சாலையோர மரங்களில் ஆணியால் அடிக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்றிய பசுமை ஆா்வலா்

ராமநாதபுரம் நகா் பகுதியில் சாலையோரம் உள்ள மரங்களில் ஆணி அடிக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றும் பணியில் பசுமை முதன்மையாளா் விருது பெற்ற சுபாஷ் சீனிவாசன் வியாழக்கிழமை ஈடுபட்டாா். ராமநாதபுரம் பொருளாதார ... மேலும் பார்க்க