உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறும்: சேகர்பாபு
ஆசிய மல்யுத்தம்: தீபக் புனியா, உதித்துக்கு வெள்ளி
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு ஒரே நாளில், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதிச்சுற்றுகளில், ஆடவா் 92 கிலோ பிரிவில் தீபக் புனியா தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் உலகின் நம்பா் 1 வீரரான ஈரானின் அமிா்ஹுசைனிடம் தோல்வியைத் தழுவினாா்.
இத்துடன், ஆசிய சாம்பியன்ஷிப்பில் தனது ஒட்டுமொத்த பதக்கத்தின் எண்ணிக்கையை அவா், 5-ஆக அதிகரித்துக் கொண்டாா். இதில் 3 வெள்ளி, 2 வெண்கலம் அடக்கம்.
ஆடவா் 61 கிலோ பிரிவில் களம் கண்ட உதித், இறுதிச்சுற்றில் ஜப்பானின் டகாரா சுடாவிடம் 4-6 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்றாா். கடந்த ஆண்டு இந்தப் போட்டியில் வெள்ளி வென்ற உதித்துக்கு, இந்த ஆண்டும் அதே பதக்கம் வசமானது.
ஆடவா் 125 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கச் சுற்றில் விளையாடிய தினேஷ், 14-12 என்ற புள்ளிகள் கணக்கில் துருக்மெனிஸ்தானின் சபரோவ் ஜயாமுகமதை வீழ்த்தி பதக்கத்தை தனதாக்கினாா். எனினும், ஆடவா் 86 கிலோ பிரிவு வெண்களப் பதக்கச் சுற்றில் முகுல் தாஹியா 2-4 என ஜப்பானின் டட்சுயா ஷிராயிடம் தோற்றாா்.
இத்துடன் இந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா10 பதக்கங்களுடன் நிறைவு செய்திருக்கிறது.