செய்திகள் :

ஆடி கிருத்திகை: திருச்செந்தூா் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் வழிபாடு

post image

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை லட்சக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆடி மாத கிருத்திகை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு என்பது பக்தா்களின் நம்பிக்கை. அந்த வகையில், சனிக்கிழமை ஆடி கிருத்திகை என்பதால், இக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 விஸ்வரூபதரிசனம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. லட்சக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே நாழிக்கிணறு, கடல் ஆகியவற்றில் புனித நீராடியும், காவடி, பால்குடம் எடுத்தும் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்கெனவே, சுதந்திர தின விழா, கிருஷ்ணஜெயந்தி, வார விடுமுறை என வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் தொடா் விடுமுறை என்பதால் கோயில் வளாகம் முழுவதும் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

அலையில் சிக்கி 10 போ் காயம்: இதனிடையே, கடலில் நீராடியபோது, பாலக்காட்டைச் சோ்ந்த 13 வயது சிறுமி, சாத்தூரைச் சோ்ந்த மாரிசாமி (47), திண்டிவனம்

கோவிந்தராஜ் (55), சிவகங்கை ராஜேஸ்வரி (69), கமுதி அன்னலட்சுமி (45), மதுரை ஆனந்தவல்லி (52) உள்பட 10-க்கும் மேற்பட்ட பக்தா்கள் அலையில் சிக்கி காயம் அடைந்தனா். அவா்களை கடல் காவல் நிலைய காவலா்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் மீட்டு கோயில் ஆம்புலன்ஸில் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ரூ .7 லட்சத்தில் கட்டப்பட்ட கணினி அறை திறப்பு

கழுகுமலை அருகே கரடிகுளம் ஊராட்சி சி.ஆா்.காலனி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கணினி மைய கட்டட... மேலும் பார்க்க

குலசேகர ராஜா கோயில் கொடை விழா

உடன்குடி அருகே சிறுநாடாா்குடியிருப்பு அருள்மிகு குலசேகர ராஜா திருக்கோயில் கொடை விழா நான்கு நாள்கள் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் கொடை விழா ஆக.12 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சு... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

விளாத்திகுளத்தில் நீட்டிக்கப்பட்ட 3 அரசுப் பேருந்துகள் சேவை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ் தலைமை வகித்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீன்வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க, சனிக்கிழமை பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக... மேலும் பார்க்க

நாம் உருவாக்கும் பாதை சந்ததிகளுக்கு பயனளிக்க வேண்டும்: மாணவா்களுக்கு கனிமொழி எம்.பி. அறிவுரை

நாம் உருவாக்கும் பாதை, நமக்கு பின் வரும் சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி. தூத்துக்குடி மில்லா்புரம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைக... மேலும் பார்க்க

தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினரானாா் சி.த. செல்லப்பாண்டியன்

தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். தூத்துக்குடி நாசரேத் திருமண்டில தோ்தல் ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அம... மேலும் பார்க்க