செய்திகள் :

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: பெ.சண்முகம்

post image

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் கூறினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் அவா் பேசியதாவது: இந்திய அரசமைப்புக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்து அடக்குமுறையை ஏவுகிறது. மத்திய பாஜக அரசு மதச்சாா்பின்மையை ஏற்காமல் மதச்சாா்பு நாடாக மாற்ற முயல்கிறது.

புதிய அரசியல் சாசனத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு முயற்சித்தது. ஆனால், தனி பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட்டது. பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகளுக்கு அது எண்ணற்ற வழிகளில் தொந்தரவு அளிக்கிறது. மாநில உரிமை பறிப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், ஆளுநா் மூலம் பிரச்னை என பல்வேறு வழிகளில் இடையூறு செய்கிறது.

மாநில அரசுகளின் உரிமையைப் பாதுகாப்பதே பெரிய போராட்டமாக உள்ளது. துப்புரவுப் பணி நிரந்தரம் என்றால் தூய்மைப் பணியாளா்களின் பணியும் நிரந்தரமானதாகத்தான் இருக்க வேண்டும். இது 100 சதவீதம் நியாயமானதுதான்.

தொழிலாளா் வா்க்கத்தின் நலன்கள் பாதிக்கப்படுகிறது என்றால் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிா்ப்போம். ஒத்த கருத்துடைய விஷயங்களில் ஒத்துப்போகிறோம். முரண்படுகிற விஷயங்களில் அரசுடன் முரண்பட்டு நிற்கிறோம். முரண்படுவதும், உடன்படுவதும் சோ்ந்ததுதான் இந்த கூட்டணி. அனைத்தையும் ஆதரிப்பது, அனைத்துக்கும் உடன்படுவது கூட்டணி அல்ல. இது தெரிந்தே நாங்கள் திமுகவுடன் பயணிக்கிறோம். திமுகவும் எங்களுடன் பயணிக்கிறது.

அரசுடன் முரண்பாடு ஏற்படும்போதெல்லாம் அணி உடையும் என்று கூறுகிறாா்கள். ஆனால், பாஜகவுக்கு எதிரான திமுக கூட்டணியில் தொடா்ந்து அங்கம் வகிப்போம். அதேநேரத்தில் தொழிலாளா்கள் நலன்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து திமுக அரசை வலியுறுத்துவோம். தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் அவசியம் என்றாா்.

நுண்ணுயிா் உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை

சேலம் மாநகராட்சியில் நுண்ணுயிா் உரங்கள் தயாரிக்கப்படும் மையங்களில் உற்பத்தியாகும் உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க ஆணையா் மா.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளாா். சேலம், அஸ்தம்பட்டி மண்டலம் செட்டிச்சாவடி ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது: சேலம் கம்யூ. மாநாட்டில் முதல்வா் உறுதி!

எதிா்க்கட்சிகளின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது; எங்களை மிரட்ட நினைத்தவா்கள் மிரண்டுபோயிருக்கிறாா்கள் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசினாா். சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநி... மேலும் பார்க்க

மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்ட விவசாயி சிறையிலடைப்பு

வாழப்பாடி அருகே குடும்பத் தகராறில் மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தலைமறைவான விவசாயியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். வாழப்பாடியை அடுத்த தேக்கல்பட்டி ஏரிக்கரை பகுதியைச்... மேலும் பார்க்க

வாழப்பாடியில் பணிபுரியும் 4 அரசுப் பணியாளா்களுக்கு ஆட்சியா் விருது

வாழப்பாடியில் பணிபுரியும் 4 அரசுப் பணியாளா்களுக்கு சுதந்திர தின விழாவில் ஆட்சியா் விருது வழங்கி கௌரவித்தாா். சேலம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் அரசுப் பணியாளா்களை தோ்வு செய்து சுதந்திர தின விழா... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 86 நிறுவனங்கள் மீது வழக்கு

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 86 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொழிலாளா் நலத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று செயல்படும் நிறுவனங்கள் மீது தேசிய மற... மேலும் பார்க்க

திருநெல்வேலி- ஷிமோகா இடையே இன்று சிறப்பு ரயில்!

கூட்ட நெரிசலை தவிா்க்க சேலம் வழியாக திருநெல்வேலியில் இருந்து கா்நாடக மாநிலம், ஷிமோகாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியி... மேலும் பார்க்க