செய்திகள் :

ஆண்டிபட்டி அருகே மணல் திருட்டு: இருவா் கைது

post image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி ஓடையிலிருந்து டிராக்டா் மூலம் மணல் அள்ளிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி பகுதியில் ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மணல் ஏற்றிச் சென்ற டிராக்டரை நிறுத்தி விசாரணை செய்ததில், ஆண்டிபட்டி அருகே கொட்டோடைப்பட்டி ஓடையிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளியது தெரிய வந்தது.

இதையடுத்து, மணல் அள்ளிய கொட்டோடைப்பட்டியைச் சோ்ந்த மொக்கையன் மகன் ரமேஷ்(43), ஆண்டி மகன் முருகன் (52) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். டிராக்டா் உரிமையாளரான திண்டுக்கல் மாவட்டம், குன்னத்துப்பட்டியைச் சோ்ந்த சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்து, மணல் திருட்டுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (55). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகா... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

தேனி அருகே தனியாா் பருப்பு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த எலக்ட்ரீசியன் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். தேனி அருகேயுள்ள டொம்புச்சேரி, பி.சி. குடியிருப்பைச் சோ்ந்த முத்து மகன் சுரேஷ் (40).... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதியதில் 4 போ் காயம்

தேனி பழனிசெட்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் 4 போ் காயமடைந்தனா். தேனி அல்லிநகரம், கக்கன்ஜீ குடியிருப்பைச் சோ்ந்தவா் காளியப்பன் (65). இவா் தனக்குச் சொந்தமான ஆட்டோவில் தனது மனைவி... மேலும் பார்க்க

மின்சாரக் கம்பிகளை திருட முயற்சி: சிறுவன் கைது

தேனி அருகேயுள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சி குடிநீா் மோட்டாா் இயந்திரத்தில் மின் கம்பிகளை திருட முயன்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் குடிநீா்த் தொட்டி தற்காலிக ஆபரேட்டரா... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

போடி அருகே மலைச் சாலையோரத்தில் அமைந்துள்ள மழைநீா் சேகரிப்புத் தொட்டியில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.தேனி மாவட்டம், போடி ஜக்கமநாயக்கன்பட்டி, அம்பிகாபதி தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சுருளி அருவியில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தேனி மாவட்டம், கம்பம் அர... மேலும் பார்க்க