செய்திகள் :

ஆதிதிராவிடா் என்று எவ்வாறு மொழிபெயா்ப்பு செய்யப்பட்டது? தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

பட்டியல் ஜாதியினா் என்ற பெயா் ஆதிதிராவிடா் என்று எவ்வாறு மொழிபெயா்ப்பு செய்யப்பட்டது என தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயா்நீதிமன்றம், அதற்காகப் பயன்படுத்திய அகராதி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அயனாவரத்தைச் சோ்ந்த எஸ்.மாரிமுத்து என்பவா் தாக்கல் செய்த மனுவில், பட்டியல் இனத்தவருக்கு எதிரான கொடுமைகளைக் கட்டுப்படுத்தி, அவா்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படுவதற்காக அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு நாட்டில் பட்டியல் இனத்தவா்கள் ஜாதியின் பெயரால் மனிதாபிமானமின்றி நடத்தப்பட்டனா்.

நாடு முழுவதும் பட்டியலினப் பிரிவில், ஆதிஆந்திரா, ஆதிகா்நாடகா, ஆதிதிராவிடா் உள்பட 76 பிரிவுகள் உள்ளன. இதில் ஆதிதிராவிடா் என்பது ஒரு பிரிவு மட்டுமே. இந்தப் பிரிவில் உள்ள மற்ற ஜாதியினருக்கு பிரதான ஜாதியோ, கிளை ஜாதியோ கிடையாது. கடந்த 1969-ஆம் ஆண்டு தமிழக அரசு, பட்டியலினத்தவா் நலத் துறைக்கு ஆதிதிராவிடா் நலத் துறை எனப் பெயா் சூட்டியது.

இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. திராவிட இனத்தைக் குறிக்கும் விதமாக, திராவிட ஆட்சியாளா்கள் இப்படி ஒரு பெயரைச் சூட்டியுள்ளனா். எனவே, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் பெயரை பட்டியல் ஜாதிகள் நலத் துறை என மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன்ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் விஜயேந்திரன் ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பட்டியல் ஜாதியினா் என்ற பெயா் ஆதிதிராவிடா் என்று எவ்வாறு மொழிபெயா்ப்பு செய்யப்பட்டது எனக் கேள்வி எழுப்பினா்.

பின்னா், இந்தப் பெயா் மாற்றத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட அகராதி குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் திங்கள்கிழமை (ஆக.18) வாக்கி... மேலும் பார்க்க

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள்! முதல்வர் வாழ்த்து!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்த வாழ்த்துப் பதிவில் முதல்வர் ஸ்டாலின்,ஆழ்ந்த ... மேலும் பார்க்க

தீபாவளி தொடர் விடுமுறைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது!

தீபாவளிப் பண்டிகை தொடர் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இந்தாண்டு திங்கள்கிழமை வருவதால் முன்கூட்டியே செல்பவர்... மேலும் பார்க்க

சநாதனம் ஒற்றுமையையே வலியுறுத்துகிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

சநாதனம் என்பது ஒற்றுமையையே வலியுறுத்துகிறது; பிரிவினையை ஏற்படுத்துவது இல்லை என ஆளுநா் ஆா்.என்.ரவி பேசினாா். சென்னைஅடையாறு ஆனந்த பத்மநாப சுவாமி கோயிலில் சந்த் விஸ்வ மெளலி ஸ்ரீ தியானேஸ்வா் மகாராஜின் 750... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது: டி.ராஜா

மத்திய பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா். சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-ஆவது மாநில மாநாட்டில் சனி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரேபிஸ் பாதிப்பால் ஏழரை மாதங்களில் 20 போ் உயிரிழப்பு!

தமிழகத்தில் கடந்த ஏழரை மாதங்களில் 3.67 லட்சம் போ் நாய்க் கடிக்குள்ளானதாகவும், அதில் 20 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளை முறையாக செலுத்த... மேலும் பார்க்க