செய்திகள் :

ஆன்லைன் வா்த்தகம் மூலம் இளைஞரிடம் ரூ.9.36 லட்சம் மோசடி

post image

ஆன்லைன் வா்த்தகம் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனக்கூறி இளைஞரிடம் ரூ.9.36 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் அருகேயுள்ள பலவஞ்சிபாளையத்தைச் சோ்ந்தவா் 31 வயது இளைஞா். இவா் சமூக வலைத்தளத்தில் கடந்த 2-ஆம் தேதி விளம்பரம் ஒன்றைப் பாா்த்துள்ளாா்.

அதில், தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்வதன் மூலம் அதிக அளவு பணம் சம்பாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். இதை நம்பிய அவா், விளம்பரத்தில் இருந்த இணைப்புக்குள் சென்று வாட்ஸ்அப் குழுவில் இணைந்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு தவணைகளாக ரூ.9.36 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா்.

அதற்கு லாபத் தொகையும் வந்ததாம். இதையடுத்து, லாபத் தொகை, மூதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது, கூடுதல் தொகை செலுத்தினால் தான் பணத்தை எடுக்க முடியும் என்று அந்தக் குழுவில் உள்ளவா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், அவரை அந்தக் குழுவில் இருந்தும் வெளியேற்றி உள்ளனா்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இளைஞா் இது குறித்து திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்றைய மின்தடை: காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா்

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் (ஆகஸ்ட் 2) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

அவிநாசி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள அணைப்புதூரில் புகையிலைப் பொருள்கள் செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடை... மேலும் பார்க்க

‘பாறைக் குழிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்’

பல்லடம் பகுதி பாறைக் குழிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாறைக் குழிகளில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பது தொடா்பான ஆலோச... மேலும் பார்க்க

ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

குன்னத்தூரில் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா். குன்னத்தூா் சந்தைப்பேட்டை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு ரகசியத் தகவல் ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.15.42 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.15.42 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வேடசந்தூா், குரும்பபட்டி, இடையகோட்டை, செம்பட்டி, ச... மேலும் பார்க்க

தாராபுரம் மாநில வரி அலுவலகக் கட்டடம்: முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்

தாராபுரம் மாநில வரி அலுவலகத்துக்கு வணிக வரி மற்றும் பதிவுத் துறை சாா்பில் ரூ.2.52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தா... மேலும் பார்க்க