செய்திகள் :

‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயருக்கு காப்புரிமை! ரிலையன்ஸ் உள்பட 6 நிறுவனங்கள் விண்ணப்பம்!

post image

‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயருக்கு காப்புரிமை கோரி அம்பானியின் ரிலையன்ஸ் உள்பட 6 நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ஆயுதப் படைகள் புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கோட்டையான பஹவல்பூர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் தளமான முரிட்கே ஆகியவை அழிக்கப்பட்டன. இந்த அதிரடி தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்காக அம்பானியின் ரிலையன்ஸ் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்திருக்கின்றன. இதில், ரிலையன்ஸ் உள்பட 6 நிறுவனங்கள் காப்புரிமை வடிவமைப்பு மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டு இயக்குநரை அணுகியுள்ளனர்.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, ரிலையன்ஸ் இன்க் மற்றும் ஐந்து நிறுவனங்கள் வர்த்தக முத்திரை கோரி விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தவிர, முகேஷ் சேத்ராம் அகர்வால், குரூப் கேப்டன் கமல் சிங் ஓபர், அலோக் கோத்தாரி, ஜெயராஜ் மற்றும் உத்தம் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர்.

சிந்தூர் என்பது என்ன?

சிந்தூர் என்பது திருமணமான பெண்கள் நெற்றியில் இடும் குங்குமத்தைக் குறிக்கும் என்பதால், தங்களது கண் முன்னே கணவர், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்த, இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் கணவனை இழந்த பெண்களின் குங்குமத்துக்கு பதில் சொல்லும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், இந்தப் பெயரை பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி கொலை

பாக். தாக்குதலில் இந்தியா தரப்பில் உயிரிழப்பு இல்லை: ராணுவம்

பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதலில் இந்தியா தரப்பில் எந்தவித உயிரிழப்புகளும் இல்லை என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்த... மேலும் பார்க்க

உச்சபட்ச போர்ப் பதற்றம்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

இந்தியாவின் எல்லைப் புற மாநிலங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து முப்படை தளபதிகள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா... மேலும் பார்க்க

போர்ப் பதற்றம்: இருளில் தவிக்கும் பஞ்சாப், ராஜஸ்தான்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள ஏவுகணைத் தாக்குதலால் போர்ப் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு- காஷ்மீரின் முக்கிய நகரங்களில் மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால்,... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

பாகிஸ்தான் விமானப் படையில் எப்-16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜம்மு மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராணுவம் பாகிஸ்தானின் எஃப்-... மேலும் பார்க்க

ஜம்முவில் மீண்டும் ட்ரோன் தாக்குதல்: நடுவானில் தாக்கி அழித்த இந்திய ராணுவம்!

ஜம்முவில் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில் நடுவானிலேயே இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதனால், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டு அனைவரும் உஷார் நிலையில் உள்ளனர். மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் அன்று பிறந்த பெண் குழந்தை! சிந்தூரி என பெயரிட்ட பெற்றோர்!

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடைபெற்ற நாளில் பிறந்த பெண் குழந்தைக்கு பிகாரைச் சேர்ந்த பெற்றோர் சிந்தூரி எனப் பெயரிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காமில்... மேலும் பார்க்க