செய்திகள் :

ஆப்கானிஸ்தான் விவகாரம்: ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

post image

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட வரைவுத் தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தான் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்கள் நிகழாது எனக் கூறி இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

2021, ஆகஸ்ட் முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சிறுமிகள் பள்ளிக்குச் செல்ல தடை உள்பட பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமை, 330 மெட்ரிக் டன் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள், 58.6 மெட்ரிக் டன் நிவாரணப் பொருள்கள் எனப் பல்வேறு மனிதாபிமான ரீதியிலான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. இதுதவிர, ஐ.நா.வுடன் இணைந்து பல்வேறு உதவிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபையில் ஆப்கானிஸ்தான் சூழல் குறித்த வரைவுத் தீா்மானத்தை ஜொ்மனி அறிமுகப்படுத்தியது. அதைத் தொடா்ந்து, அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக 116 நாடுகளும் எதிராக 2 நாடுகளும் வாக்களித்தன.

இந்தியா உள்பட 12 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதையடுத்து, பெரும்பான்மை அடிப்படையில் தீா்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வாக்கெடுப்பை புறக்கணித்தது குறித்து ஐ.நா.வுக்கான இந்தியா தூதா் பா்வதனேனி ஹரீஷ் கூறியதாவது: பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு தற்போது ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலை சீா்படுத்த வேண்டுமெனில் நல்ல கொள்கைகளை ஊக்குவித்து கடுமையான கட்டுப்பாடுகளை நீக்குவதே சரியானதாக இருக்கும்.

மற்ற நாடுகளில் போருக்குப் பிந்தைய சூழலில் ஐ.நா.வும் சா்வதேச நாடுகளும் சமநிலையான முடிவுகளை எடுத்துள்ளன. அதேபோல் ஆப்கானிஸ்தானை பயங்கரவாதத் தளமாகப் பயன்படுத்திவரும் ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகள், அல்-காய்தா, லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் துணை அமைப்புகளின் செயல்பாட்டை தடுக்க சா்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் அந்நாட்டு மக்களுக்கு நல்வாழ்வை உறுதிப்படுத்த முடியும். வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளால் அங்கு மாற்றங்கள் நிகழாது என்றாா்.

இரு பாலிவுட் நடிகர்களின் பூர்விக வீடுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு ரூ.3.38 கோடி ஒதுக்கீடு!

பாலிவுட் நடிகர்கள் திலீப் குமார் மற்றும் ராஜ் கபூருக்கு சொந்தமாக பாகிஸ்தானில் உள்ள பூா்விக வீடுகளைப் பாதுகாக்க ரூ. 3 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.வடமேற்கு பாக... மேலும் பார்க்க

ரூ.50 நாணயங்கள் அறிமுகம்? மத்திய அமைச்சகம் மறுப்பு!

ரூ.50 நாணயம் அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.பார்வைக் குறைபாடுள்ள ரூ.50 தாள்களை கண்டறிய சிரமமாக இருப்பதாகக் கூறி, தில்லி உ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: 2 விமானிகள் பலி; விசாரணைக்கு உத்தரவு!

ராஜஸ்தானில் போர் விமான விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் போர் வி... மேலும் பார்க்க

அருணாசலில் யானை தாக்கி முன்னாள் எம்எல்ஏ பலி!

அருணாசலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில், யானை தாக்கியதில் அம்மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலியாகியுள்ளார். திராம் மாவட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காப்சென் ராஜ்குமார் (... மேலும் பார்க்க

நான் மகிழ்ச்சியாக இல்லை! அரசியல் வாழ்க்கை குறித்து மனம்திறந்த கங்கனா!

அரசியல் வாழ்க்கை குறித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர். இவர் ஹி... மேலும் பார்க்க

ஆப்பிள் சிஓஓ பதவிக்கு இந்திய வம்சாவளி நியமனம்! சம்பளம், பொறுப்புகள் என்னென்ன?

உலகளாவிய மொபைல்போன் சந்தையில் தனக்கென இடத்தை ஆப்பிள் நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் உயர் பொறுப்பில் பணிபுரிய இந்திய வம்சாவளி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இய... மேலும் பார்க்க