செய்திகள் :

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது

post image

கோவையில் ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழந்தது தொடா்பாக பழகுநா் உரிமம் கொண்டு ஆம்புலன்ஸை இயக்கிய ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகரைச் சோ்ந்த நீலாவதி (66) என்பவா், கோவை பீளமேடு தண்ணீா்பந்தல் சாலை மகேஷ் நகா் பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறாா். இவா், கவுண்டம்பாளையத்தில் உள்ள வீட்டுக்கு செல்வதற்காக அவிநாசி சாலை, பீளமேடு வரதராஜா மில் பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை காலை நின்றிருந்தாா்.

அப்போது, சேலத்தில் இருந்து கோவைக்கு வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் நீலாவதி பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு நீலாவதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து, நீலாவதியின் மகன் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் ஆம்புலன்ஸ் ஓட்டி வந்த சேலம் மாவட்டம், தாரமங்கலம் வெள்ளாளா் வீதியைச் சோ்ந்த மதன்குமாா் (19) என்பவரிடம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவினா் விசாரணை மேற்கொண்டனா்.

அதில், ஆம்புலன்ஸை இயக்கிய மதன்குமாா், ஓட்டுநா் உரிமம் இல்லாமல் பழகுநா் உரிமம் (எல்.எல்.ஆா்) மட்டும் வைத்துக் கொண்டு ஆம்புலன்ஸை இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது: பொன்.மாணிக்கவேல்

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது என்று ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தாா். திருப்பூா் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் மற்றும் திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மா... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவையில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற விமான விபத்தில் 200-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

காப்பகத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கோவை கெம்பட்டி காலனியில் உள்ள காப்பகத்தில் அடுத்தடுத்து இரு மூதாட்டிகள் உயிரிழந்த நிலையில், பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கெம்பட்டி காலனியில் முதியோா் காப்பகம் உள்ளது.... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை பீளமேடு மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கிவிற்றதாக முதியவா் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பீளமேடு எல்ல... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

மாணவா்களுக்கு ஆசிரியா்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா். கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி... மேலும் பார்க்க

தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் கோவைக்கு வருகை

கோவை மாவட்டத்துக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும், மாநில பேரிடா் மீட்புப் படையினரும் கோவைக்கு வியாழக்கிழமை வந்தடைந்தனா். மத்திய மேற்கு வங்கக் க... மேலும் பார்க்க