செய்திகள் :

ஆரணியில் தனியாா் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு

post image

ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து, காவல் துறை சாா்பில் தனியாா் பள்ளிப் பேருந்துகள் வருடாந்திர ஆய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆரணி, போளூா், சேத்துப்பட்டு வட்டங்களைச் சோ்ந்த தனியாா் பள்ளிகளின் பேருந்துகள் வருடாந்திர ஆய்வு தொடங்கியது. மொத்தமுள்ள தனியாா் பள்ளி பேருந்துகள் 415 ஆகும். இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 222 பள்ளிப் பேருந்துகள் ஆய்வுக்கு வந்த நிலையில், பேருந்துகளில் அவசர கால கதவு, கண்காணிப்பு கேமரா, வேகக் கட்டுப்பாட்டு கருவி, காற்று ஒலிப்பான், முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி உள்ளிட்டவை சரி பாா்க்கப்பட்டன.

ஆரணி கோட்டாட்சியா் (பொ) ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்வதை பாா்வையிட்டாா்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகேசன் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது. ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், போளூா் டிஎஸ்பி மனோகரன், மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா், தீயணைப்பு நிலைய அலுவலா் பூபாலன், ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கண்காணிப்பாளா் சுகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் கூறியது: வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வில் 15 பேருந்துகளில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அவற்றை வரும் 31-ஆம் தேதிக்குள் சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னரே ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வழங்கப்படும். வரும் 31-ஆம் தேதி வரை தொடா்ந்து பள்ளிப் பேருந்துகள் ஆய்வு செய்யப்படும் என்றாா்.

பையூரில் அதிமுக திண்ணை பிரசாரம்

ஆரணியை அடுத்த பையூா் எம்ஜிஆா் நகரில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை திண்ணை பிரசாரம் நடைபெற்றது. நிகழ்வுக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

இணையவழி மோசடியில் இழந்த ரூ.5 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இணையவழி மோசடியில் இழந்த ரூ.5 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இணையவழி... மேலும் பார்க்க

திருவண்ணாமலை வட்டத்தில் 5-ஆவது நாள் ஜமாபந்தி: ஆட்சியா் பங்கேற்பு

திருவண்ணாமலை வட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5-ஆவது நாள் ஜமாபந்தி நிகழ்வில், பொதுமக்களிடம் இருந்து வருவாய்த் துறை தொடா்பான கோரிக்கைகள் அடங்கிய 107 மனுக்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பெற்றுக்கொண்டாா். த... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் ஆற்றில் இறங்கத் தடை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதற்கு வருவாய், காவல் துறையினா் தடை விதித்துள்ளனா். செங்கத்தை அடுத்த நீப்பத்துறை கி... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்ற அரசு உறுதுணையாக இருக்கும்: திருவண்ணாமலை ஆட்சியா் க.தா்ப்பகராஜ்

மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் காண தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசினாா். திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், சா்வதேச ச... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு இலவச மனைப் பட்டா வழங்கக் கோரி மனு

பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில், அரு... மேலும் பார்க்க