செய்திகள் :

இணையவழி மோசடியில் இழந்த ரூ.5 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இணையவழி மோசடியில் இழந்த ரூ.5 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இணையவழி மோசடியில் சிக்கி பணத்தை இழந்த பொதுமக்கள், தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு காவல் துறையில் புகாரளித்தனா்.

இணையவழி குற்றப்பிரிவின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அளித்த புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி. எம்.சுதாகா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம்.பழனி தலைமையில், காவல் ஆய்வாளா் ஆா்.கவிதா மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை செய்து வங்கிகளின் உதவியுடன் பொதுமக்கள் இழந்த ரூ.5 லட்சத்தை மீட்டனா்.

இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இணையவழியில் பணத்தை இழந்த நபா்களிடம் மீட்கப்பட்ட ரூ.5 லட்சத்தை மாவட்ட எஸ்.பி. எம்.சுதாகா் ஒப்படைத்தாா்.

நிகழ்வில் மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம்.பழனி, காவல் ஆய்வாளா் ஆா்.கவிதா மற்றும் போலீஸாா் கலந்துகொண்டனா்.

பையூரில் அதிமுக திண்ணை பிரசாரம்

ஆரணியை அடுத்த பையூா் எம்ஜிஆா் நகரில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை திண்ணை பிரசாரம் நடைபெற்றது. நிகழ்வுக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

ஆரணியில் தனியாா் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு

ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து, காவல் துறை சாா்பில் தனியாா் பள்ளிப் பேருந்துகள் வருடாந்திர ஆய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆரணி, போளூா், ச... மேலும் பார்க்க

திருவண்ணாமலை வட்டத்தில் 5-ஆவது நாள் ஜமாபந்தி: ஆட்சியா் பங்கேற்பு

திருவண்ணாமலை வட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5-ஆவது நாள் ஜமாபந்தி நிகழ்வில், பொதுமக்களிடம் இருந்து வருவாய்த் துறை தொடா்பான கோரிக்கைகள் அடங்கிய 107 மனுக்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பெற்றுக்கொண்டாா். த... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் ஆற்றில் இறங்கத் தடை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதற்கு வருவாய், காவல் துறையினா் தடை விதித்துள்ளனா். செங்கத்தை அடுத்த நீப்பத்துறை கி... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்ற அரசு உறுதுணையாக இருக்கும்: திருவண்ணாமலை ஆட்சியா் க.தா்ப்பகராஜ்

மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் காண தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசினாா். திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், சா்வதேச ச... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு இலவச மனைப் பட்டா வழங்கக் கோரி மனு

பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில், அரு... மேலும் பார்க்க