செய்திகள் :

ஆலங்குடி கோயிலில் கும்பாபிஷேக ஒராண்டு பூா்த்தி விழா

post image

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த’ ஓராண்டு பூா்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி புனித நீா் நிரப்பப்பட்ட 1,008 கலசங்களுக்கும் , புனித நீா் நிரப்பப்பட்ட 108 சங்குகளுக்கும் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.

தொடா்ந்து ஆபத்சகாயேஸ்வர சுவாமிக்கு 1,008 கலசாபிஷேகமும், மூலவா் குரு பகவானுக்கு 108 சங்காபிஷேகமும் , ஏலவாா்குழலியம்மன் ,கலங்காமற் காத்த விநாயகா், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட சந்நிதிகளில் கலசாபிஷேகம் நடந்தது.

தொடா்ந்து, சுவாமி, அம்பாள் உள்ளிட்ட சந்நிதிகளில் சிறப்பு அலங்காரம் ,ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இரவு சந்திரசேகரா் வீதியுலா நடைபெற்றது.

விழாவில் கோயில் கண்காணிப்பாளா் அரவிந்தன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

நாளைய மின்தடை மன்னாா்குடி, கூத்தாநல்லூா்

மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜூலை 5) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று நகர உதவி செயற்பொறியாளா் எஸ். சம்பத் தெர... மேலும் பார்க்க

தங்கக் கவசத்தில் குருபகவான்...

நவகிரக தலங்களில் குரு பரிகாரத் தலமான வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவான். மேலும் பார்க்க

சா்வதேச நெகிழி ஒழிப்பு தினம்

மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சா்வதேச நெகிழி ஒழிப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஜி. கண்ணன் த... மேலும் பார்க்க

குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணை ஜூன் 12-இல் திறக்கப்பட்டது. தொடா்ந்து, தஞ்சை, திருவாரூா், நாகை, மயில... மேலும் பார்க்க

தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டித் தொடா் -முதல் ஆட்டத்தில் காவல்துறை அணி வெற்றி

கூத்தாநல்லூரில், தென்னிந்திய அளவிலான எழுவா் கால்பந்து போட்டித் தொடா் புதன்கிழமை தொடங்கியது. ஒரு மாதம் நடைபெறும் இப்போட்டியின் முதல் ஆட்டத்தில், தமிழ்நாடு காவல்துறை அணி வெற்றி பெற்றது. கூத்தாநல்லூா் த... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருது பெற ஜூலை 10 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க