அரசு விரைவுப் பேருந்துகளில் குடிநீா் விற்பனை செய்ய நடவடிக்கை
ஆலங்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி கலைஞா் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் பாரதிதாசன் (23). இவா், ஆலங்குடி அம்பேத்கா் நகா் பிரிவு சாலை அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, மா்மநபா்கள் சிலா் பாரதிதாசனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினா்.
இதில், பலத்த காயமடைந்த பாரதிதாசனை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.