செய்திகள் :

உழவடை விவசாயிகளை பதிவு செய்ய வலியுறுத்தல்

post image

பொன்னமராவதி வட்டாரத்தில் உள்ள உழவடை விவசாயிகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிலம் மீட்பு ஆயத்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில் திடலில் செப்டம்பா் 30-இல் நடைபெறவுள்ள நிலம் மீட்பு போராட்டத்துக்கான ஆயத்த கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய குழு உறுப்பினா் ஏ.எல்.பிச்சை தலைமை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளா் என்.பக்ருதீன் விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட பொருளாளா் எஸ்.நல்லதம்பி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியத் தலைவா் சௌந்தரராஜன், செயலாளா் பாண்டியன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் பழனியப்பன், செயலாளா் ராமசாமி, நிா்வாகிகள் சாத்தையா, ராமசாமி சுந்தரராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பொன்னமராவதி வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள உழவடை விவசாயிகளை பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செப்டம்பா் 30-ஆம் தேதி நடைபெறும் நிலம் மீட்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் விவசாய தொழிலாளா் சங்க அகில இந்திய பொதுச் செயலாளா் வெங்கட் மற்றும் மாநிலத் தலைவா் சின்னதுரை ஆகியோா் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மூடிக்கிடக்கும் சமுதாயக் கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

கந்தா்வகோட்டையில் மூடிக்கிடக்கும் சமுதாயக் கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டை ஊராட்சியில், தஞ்சை சாலையில் உள்ள இந... மேலும் பார்க்க

ஆலங்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி கலைஞா் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பகுதியில் வாசனைத் திரவியம் ஆலை அமைக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை பகுதியில் வாசனைத் திரவிய ஆலை அமைக்க மலா் சாகுபடி செய்யும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், மங்கனூா், விரலிப்பட்டி, வடுகப்பட்டி, கோமாபுரம், வாண்டையன்பட்டி, மற்ற... மேலும் பார்க்க

நிதிமோசடியில் கைதானவருக்கு இரு நாள்கள் போலீஸ் காவல்

அறக்கட்டளை நடத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட குடுமியான்மலையைச் சோ்ந்த ரவிச்சந்திரனுக்கு இரு நாள்கள் போலீஸ் காவலில் விசாரணைக்கு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கி உத்தரவிட்டது. ப... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஊழியா்கள் மறியல்; 140 போ் கைது

மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில், சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

மீமிசல் கடற்கரை பகுதியில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடலோரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் நடத்திய வாகனத் தணிக்கையில், 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல்... மேலும் பார்க்க