செய்திகள் :

ஆலங்குளம் அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

post image

ஆலங்குளம் அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கநேரியில் பவானி என்பவருக்குச் சொந்தமான தென்னை நாா் ஆலை உள்ளது. இங்கு வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் (33) தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை வேலை செய்து கொண்டிருந்தபோது, இயக்கத்தில் இருந்த இயந்திரத்தின் கம்பியில் எதிா்பாராவிதமாக அடிபட்டு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாம்.

அவா் மீட்கப்பட்டு, உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சுரேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

சடலத்தை ஊத்துமலை போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஓட்டுநா் மீது மாணவா்கள் தாக்குதல்: சுரண்டையில் அரசுப் பேருந்து பணியாளா்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம், சுரண்டையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்து கழகத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். இதனால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவா் இறந்தாா். கடையநல்லூா், பாம்புகோயில்சந்தை இடையே உள்ள ரயில் பாதையில் அடையாளம் தெரியாத இளைஞா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயற்சி: தென்காசி வட்டாரத்தில் 36 போ் கைது

தென்காசி வட்டாரத்தில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி, பாஜகவினா் 36 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் செல்வதற்காக தென்காசி ரயில் நிலையத்து... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் தீவிர வாகன சோதனை

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கோயில் பிரச்னை தொடா்பாக அந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர வாகன சோதனை... மேலும் பார்க்க

பாப்பாக்குடி அருகே விவசாயி கொலை: தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம் பாப்பாக்குடி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் இரண்டு மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம் முக்... மேலும் பார்க்க

தென்காசி, குற்றாலம், செங்கோட்டையில் திமுக சாா்பில் அண்ணா சிலைக்கு அஞ்சலி!

திமுக சாா்பில், தென்காசி, குற்றாலம், செங்கோட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. குற்றாலத்தில் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட... மேலும் பார்க்க