செய்திகள் :

ஆஸ்திரியாவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: மாணவர்கள், ஆசிரியர் உள்பட 11 பேர் பலி!

post image

வியன்னா: ஆஸ்திரியாவில் உள்ளதொரு பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள், ஆசிரியர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

ஆஸ்திரியாவில் க்ராஸ் நகரில் உள்ளதொரு பள்ளியில் இன்று(ஜூன் 10) காலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. இது குறித்து, காலை 10 மணியளவில் காவல்துறைக்கு தகவல் வந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் பள்ளியில் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ததுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பள்ளியில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன்பின் அவர், பள்ளி கழிப்பறைக்குச் சென்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது பலி 11-ஆக உயர்ந்துள்ளது. இந்த துயர சம்பவத்துக்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயென் உள்பட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் உருவாக்கிய பாலஸ்தீன தீவிரவாதிகள் மீது ஹமாஸ் தாக்குதல்! 50 பேர் பலி!

காஸாவில் கடந்த சில மாதங்களில், ஹமாஸ் படையின் தாக்குதலில், இஸ்ரேல் ஆயுதம் வழங்கி உருவாக்கிய பாலஸ்தீன தீவிரவாதிகள் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் இஸ்ரேல் ஆயுதம் வழங்கி உருவாக்கிய, யா... மேலும் பார்க்க

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்! ஏன்?

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்தவர், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.கனடாவில் வசித்து வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஷாஜீப் கான் என்பவர், ஐஎஸ்ஐஎஸ் அ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கைதாகி விடுதலையான டிக்டாக் பிரபலம்! நாட்டை விட்டு வெளியேறினார்!

அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற டிக்டாக் பிரபலம், அந்நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். செனகல் நாட்டைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் காபி லேம் (எ) கபானே லேம் (வயது 25). இவர... மேலும் பார்க்க

டிரம்ப் குறித்து கருத்து: வருத்தம் தெரிவித்தார் எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பாக தான் தெரிவித்த சில கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியிருக்கிறார். மேலும் பார்க்க

வலுக்கும் போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் இரவு நேர ஊரடங்கு!

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஏற்பட்டுள்ள வன்முறை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த நகர மேயர் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகள... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ்: ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய முகமுடி கொள்ளையர்கள்!

லாஸ் ஏஞ்சலீஸ் வன்முறையைப் பயன்படுத்தி முகமூடியுடன் ஆப்பிள் மொபைல் கடையை சூறையாடிய கொள்ளையர்களால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக... மேலும் பார்க்க