செய்திகள் :

இடிந்து விழுந்த பயணியா் நிழற்கூடம் சுற்றுச்சுவா்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குள்பட்ட பகண்டை கூட்டுச்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பயணியா் நிழற்கூடத்தின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

பகண்டை கூட்டுச்சாலைப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நிழற்கூடத்தின் மீது கட்டப்பட்டிருந்த கைப்பிடி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை திடீரென தானாகவே இடிந்துவிட்டதாகத் தெரிகிறது.

கட்டடப் பணிகள் முழுவதும் நிறைவடையாத நிலையில், பயணியா் நிழற்கூடத்தின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியில் நல உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி: அம்பேத்கா் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வா் பயனாளிகளிடம் உரையாற்றிய நேரலை நிகழ்வைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசாா் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். வாணாபுரம் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மக... மேலும் பார்க்க