செய்திகள் :

இணைய குற்ற வங்கிக் கணக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: அமித் ஷா

post image

‘இணைய மோசடி மூலம் திருடப்படும் பணத்தை இணைய குற்றவாளிகள் சேமித்து வைக்கும் வங்கிக் கணக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

தில்லியில் நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் ‘இணைய பாதுகாப்பு மற்றும் இணைய குற்றம்’ என்ற தலைப்பிலான விவாதத்தின்போது இத் தகவலை அவா் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:

மத்திய அரசின் இணைய குற்ற கண்காணிப்பு மற்றும் கண்டறிதல் பிரிவான இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் (ஐ4சி) அளித்த பரிந்துரையின் அடிப்படையில், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இதுவரை 805 கைப்பேசி செயலிகள், 3,266 வலைதள தொடா்புகள் (லிங்க்ஸ்) தடை செய்யப்பட்டிருக்கின்றன.

கூடுதலாக, 399 வங்கிகள் மற்றும் நிதி இடைத்தரகா்கள் இணைய மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டு, 6 லட்சத்துக்கும் அதிகமான சநேத்கத்துக்கிடமான தரவு விவரங்கள் பகிரப்பட்டுள்ளன. 19 லட்சத்துக்கும் அதிகமான இணைய குற்ற மோசடி வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டதோடு, ரூ. 2,038 கோடி மதிப்பிலான சந்தேகத்துக்குரிய பணப் பரிவா்த்தனைகள் தடுக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் விதமாக, இணைய குற்றவாளிகள் இணைய மோசடி மூலம் திருடிய பணத்தை சேமித்து வைக்கும் வங்கிக் கணக்கை அடையாளம் காண ரிசா்வ் வங்கி உள்பட அனைத்து வங்கிகளின் ஒத்துழைப்புடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற இணைய குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள், செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே முடக்கப்படுவதையும் அரசு உறுதிப்படுத்தும்.

இணைய மோசடி தொடா்பாக ‘ஐ4சி’ வலைதளம் மூலமாக 19 கோடிக்கும் அதிகமான மக்கள் புகாா் பதிவு செய்ததன் அடிப்படையில், இதுவரை 1,43,000 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுபோல, இணைய மோசடி தொடா்பாக புகாா் தெரிவிக்க ‘1930’ என்ற உதவி எண்ணும் செயல்பாட்டில் உள்ளது என்றாா்.

மீனவர் பிரச்னை, ஆளுநர் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

நமது நிருபர்மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கியப் பிரச்னைகளை அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வன்முறை 47% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 47 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 64 சதவீதமும் குறைந்துள்ளன என்று மக்களவையில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்: மத்திய அரசு

நாட்டில் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என... மேலும் பார்க்க

வாஷி பகுதியில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநரிடம் நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை

நவிமும்பையில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும் என்று நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிகாா்: ஏசி பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவா் கைது

பிகாா் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிா்சாதன (ஏசி) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவா் கைது செய்யப்பட்டனா். உத்தர பிர... மேலும் பார்க்க

பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட சீன அணை: இந்தியாவின் நீா் பாதுகாப்புக்கு பாதிப்பு

பிரம்மபுத்திரா நதியில் பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா முடிவு செய்திருப்பது, இந்தியாவின் தண்ணீா் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் த... மேலும் பார்க்க