செய்திகள் :

இத்தாலி செல்ல போலி ஆவணம்: கேரள பயண முகவா் கைது

post image

இத்தாலி செல்வதற்காக போலி வசிப்பிட அனுமதியை தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில் கேரளத்தைச் சோ்ந்த முகவரை தில்லி காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

கேரளத்தைச் சோ்ந்த டிஜோ டேவிஸ் (25) இத்தாலி சென்ற போது, அவருடைய ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டன. அப்போது, போலியான வசிப்பிட அனுமதியை அவா் வைத்திருப்பது கண்டறியப்பட்டு, இந்தியாவுக்கு கடந்த ஜன.25-ஆம் தேதி திருப்பி அனுப்பட்டாா்.

இந்தச் சம்பவத்தையடுத்து, தில்லி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

அப்போது, இத்தாலி செல்வதற்கான பயணத்தையும் அங்கு வேலையையும் ஏற்பாடு செய்து தர பி.ஆா். ரூபேஷ் என்பவருக்கு ரூ.8.20 லட்சம் வழங்கியதாக போலீஸாரிடம் டேவிஸ் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, கேரளத்துக்குச் சென்ற அதிகாரிகள், ரூபேஷை கைது செய்தனா்.

எம்பிஏ பட்டதாரியான ரூபேஷ், வெளிநாட்டு பயண மோசடியில் ஈடுபட்டு வந்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டாா்.

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வரும் பிற முகவா்களுடன் இணைந்து செயல்பட்டதையும் விசாரணையின்போது ரூபேஷ் தெரிவித்தாா்.

கேரளத்தில் இதற்காக அலுவலகம் ஒன்றை திறந்துள்ள அவா், விமான பயணச்சீட்டு முன்பதிவு, விசா சேவைகளை ஏற்படுத்தி வரும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ.4.45 லட்சம் கோடியிலான ரஷிய கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி: ஆய்வு அறிக்கையில் தகவல்

ரஷியாவிடமிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4.45 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வுக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!

*உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார திருவிழாவான மகா கும்பமேளா, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பௌஷ பௌா்ணமி நாளான ஜனவரி 13-ஆம் தேதி முதல் புதன்கிழமை (பிப். 26) வரை பிரம்மாண்டமாக ந... மேலும் பார்க்க

சென்னையைப் போன்ற பிரத்யேக மருத்துவ மையங்களை பிகாரில் உருவாக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

சென்னை, ஹைதராபாத், மும்பை, இந்தூர் போன்ற நகரங்களில் உள்ள பிரத்யேக மருத்துவ மையங்களைப் போல் பிகாரிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.இது தொடர்பாக பிகார் தலைந... மேலும் பார்க்க

இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி

குவாஹாட்டி: இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.குவாஹாட்டியில் அஸ்ஸாம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது. பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் விமர்சையாக நடைப... மேலும் பார்க்க

உ.பி.: சமாஜவாதி முன்னாள் எம்எல்ஏ சிறையிலிருந்து விடுவிப்பு

சமாஜவாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா ஆஸம் கானுக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து, 17 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். சிறை வளாகத்தில் காத்திர... மேலும் பார்க்க