செய்திகள் :

இந்திய ஐ-போன்களை அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்யும் ஆப்பிள்!

post image

வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ-போன்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தியதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக, தனக்குச் சொந்தமான 5 விமானங்களில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ-போன்களை இடமாற்றம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அதிக வணிகத்தை மேற்கொள்ளும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார்.

அதிக வரி வசூலிக்கும் இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு 10% பரஸ்பர வரி விதிப்பை ஏப். 5 முதல் அமலுக்குக் கொண்டுவந்தார். இதன்படி இந்த நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.

இந்த வரி விதிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில் தற்காலிகத் தீர்வை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ-போன்களை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்ல ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

அதன்படி ஆப்பிள் நிறுவனம், முதற்கட்டமாக 3 விமானங்களிலும், பின்னர் 2 விமானங்களிலும் முழுக்க ஐ-போன்களை எடுத்துச் சென்றுள்ளது.

திருத்தப்பட்ட வரி விதிப்பால் சர்வதேச வணிகக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க சந்தைகளில் சில்லறை விற்பனையில் எந்தவித மாற்றங்களையும் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதற்காக ஆப்பிள் இந்த முயற்சியை எடுத்துள்ளது.

இது தற்காலிகத் தீர்வாக இருக்குமே தவிர, நிரந்தர தீர்வாக அமையாது எனவும் ஆப்பிள் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐ-போன்கள் அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இந்திய பயனர்கள் முன்பை விட, கூடுதல் விலை கொடுத்து ஐ-போன்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஐ-போன் 16 மற்றும் ஐ-போன் 16 ப்ரோ ஆகிய இரு தயாரிப்புகள் மூலம் இந்தியாவில் தயாரிப்பைத் தொடங்கிய ஆப்பிள் நிறுவனம், தனது உற்பத்தி சங்கிலிக்கு சீனா, வியட்நாம் போன்ற நாடுகளையும் சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | லேப்டாப் தயாரிப்பில் களமிறங்கும் செல்போன் நிறுவனம்!

ரூ.244 கோடி வரி பாக்கி: யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

பிரபல தனியாா் வங்கியான யெஸ் வங்கி 2016-17 -ஆம் ஆண்டில் ரூ.244 கோடி வரி செலுத்தாமல் இருப்பதாக வருமான வரித் துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அந்த வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேர... மேலும் பார்க்க

வட்டி விகிதத்தைக் குறைத்த பிஓஎம்

ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசா்வ் வங்கி குறைத்ததைத் தொடா்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கானதத்தை பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி (பிஓபி) குறைத்துள்ளது.இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

எம் & எம் காா்கள் விற்பனை 18% உயா்வு

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை கடந்த மாா்ச் மாதத்தில் 18 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:க... மேலும் பார்க்க

சிம் அட்டைகள் விநியோகம்: ஏா்டெல் - பிளிங்க்இட் ஒப்பந்தம்

தங்களது சிம் அட்டைகளை வாடிக்கையாளா்களுக்கு விநியோகிப்பதற்காக, துரித இணையவழி வா்த்தகத் தளமான பிளிங்க்இட்-உடன் முன்னணி தகவல் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பாா்தி ஏா்டெல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது க... மேலும் பார்க்க

அசத்தும் வசதிகளுடன் ஹானர் பவர் ஸ்மார்ட்போன்! இந்தியாவில் வெளியீடு எப்போது?

ஹானர் பவர் 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் நேற்று (ஏப். 15) வெளியானது. பல்வேறு அசத்தும் தொழிழ்நுட்ப வசதிகளுடன் வெளியான இந்த ஸ்மார்ட்போன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிறப்பம்சங்கள் என்னென்ன?ஹானர் பவர் ... மேலும் பார்க்க

விப்ரோ: 4வது காலாண்டு லாபம் 4.5% அதிகரிப்பு!

விப்ரோ நிறுவனத்தின் டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 4.5 சதவிகிதம் அதிகரித்து ரூ.3,354 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இது சந்தையின் எதிர்பார்ப்புகளை விஞ்சியு... மேலும் பார்க்க