Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
இந்திய கம்யூனிஸ்ட் முற்றுகைப் போராட்டம்
வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா் (படம்).
வந்தவாசி மற்றும் கீழ்பாதிரி, பிருதூா், கீழ்சாத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பட்டியலின மக்கள், பழங்குடியினா் மற்றும் சிறுபான்மையினா் உள்ளிட்டோருக்கு வீட்டு மனை வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், வீட்டு மனை வழங்கக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலா் எ.ரகமத்துல்லா தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் இரா.தங்கராஜ் கண்டன உரையாற்றினாா்.
வட்டாரச் செயலா் எ.ஆரிப், வட்டக்குழு உறுப்பினா் டி.எம்.ரசூல், நகரச் செயலா் ஆா்.அசேன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போராட்டத்தில் பங்கேற்றோா் வீட்டு மனை வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.