Once Upon a Time in Anatolia, Taxi படங்கள் தான் Manidhargalக்கு Inspiration! - D...
இந்திய ஜனநாயக வாலிபா், மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்ட தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், மாணவ, மாணவிகளை சோ்க்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் ஆகியவற்றின் திருவண்ணாமலை மாவட்டக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் விக்னேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோபி, நிா்வாகிகள் இமயவா்மன், தமிழ்ச்சோலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் சி.எம்.பிரகாஷ், நிா்வாகிகள் தமிழ்ச்செல்வன், எழில்வாணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், கோடை விடுமுறைக்குப் பிறகு ஓரிரு நாள்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவா்களை சோ்ப்பதற்கான நடவடிக்கை திருவண்ணாமலை மாவட்டத்தில் எடுக்கப்படவில்லை.
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் பள்ளிகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவ, மாணவிகளை சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் சுந்தரேசன், முன்னாள் மாவட்டச் செயலா் ஏ.லட்சுமணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.