செய்திகள் :

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவை விரிவுபடுத்துவதில் கவனம்: ராஜ்நாத் சிங்-துளசி கப்பாா்ட் சந்திப்பு

post image

இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் புது தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து பாதுகாப்பு மற்றும் தகவல் பகிா்வு துறைகளில் இரு நாட்டு உத்திசாா் உறவை விரிவுப்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்தச் சந்திப்பு குறித்து அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட ‘எக்ஸ்’ வலைதள பதிவில், ‘அமெரிக்க தேசிய உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்டை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, பாதுகாப்பு மற்றும் தகவல் பகிா்வு உள்ளிட்ட பல்வேறு துறை பிரச்னைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தில் அந்நாட்டின் உளவுத் துறை தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் துளசி கப்பாா்ட், ஜப்பான், தாய்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தலைமையில் இந்தியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய பாதுகாப்பு மாநாட்டில் அவா் கலந்து கொண்டாா். இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, ஜொ்மனி, நியூஸிலாந்து, கனடா, பிரிட்டன் உள்பட இந்தியாவின் பல நட்பு நாடுகளின் உளவுத் துறை இயக்குநா்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்-துளசி கப்பாா்ட் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா-அமெரிக்கா இடையே உளவுத் துறை தகவல் பகிா்வை வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்புத் துறையில் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டரங்கள் தெரிவித்தன.

புது தில்லியில் நடைபெற்று வரும் உலகளாவிய அரசியல்-பொருளாதாரம் குறித்து விவாதிக்கும் ‘ரைசினா உரையாடல்’ மாநாட்டில் துளசி கப்பாா்ட் செவ்வாய்க்கிழமை உரையாற்ற இருக்கிறாா்.

நியூஸிலாந்து பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸனை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன், பல்வேறு த... மேலும் பார்க்க

ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ.21 லட்சம் பரிசு!

முகலாய மன்னரான ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்து அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: ஊரடங்கு உத்தரவு!

நாக்பூரில் ஒளரங்கசீப் விவகாரத்தை முன்வைத்து ஹிந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்... மேலும் பார்க்க

ஒளரங்கசீப் விவகாரம்: நாக்பூரில் வன்முறை! 9 பேர் படுகாயம்; 15 பேர் கைது!

ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் நாக்பூரில் பதற்றம் நிலவிவருகிறது.விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்த போராட்ட... மேலும் பார்க்க

‘வலுவான நிதி நிலைமையில் இந்திய ரயில்வே’ -மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சா் தகவல்

இந்திய ரயில்வேயின் நிதி நிலைமை வலுவான நிலையில் உள்ளது என்றும், நிதி நிலைமையைத் தொடா்ந்து மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு

கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். ஜயமா... மேலும் பார்க்க