செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்: 27 விமான நிலையங்கள் மூடல், 400 விமானங்கள் ரத்து!

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிவருவதையடுத்து நாடு முழுவதும் 27 விமான நிலையங்களும், 400-க்கும் மேற்பட்ட விமானங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 22ல் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதல் நாட்டை உலுக்கிய நிலையில், தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும்வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றது.

ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் இந்த அதிரடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மறைவிடங்களைக் கண்டுபிடித்து இந்திர ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 13 பேர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் இந்தியாவின் வடக்கு மேற்குப் பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 27 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மே 10 காலை 5.29 மணி வரை இந்த தடை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகா், ஜம்மு, லே, அமிருதசரஸ், பதான்கோட், சண்டீகா், ஜோத்பூா், ஜெய்சால்மா், சிம்லா, தா்மசாலா, ஜாம்நகா், கிஷண்கா் உள்பட 27 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஆகாசா, ஏா் இந்தியா, இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் தனது விமான சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன. முன்னதாக முன்பதிவு செய்தவர்களுக்குக் கட்டணம் திருப்பியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து என்ன? முப்படை தளபதிகளுடன் பிரதமர் விரிவான ஆலோசனை!

புது தில்லி: போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவான ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்... மேலும் பார்க்க

அயாத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று, மீதமுள்ள கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்தார்.அப்போது கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து உத்தரப் பிரதேச முதல்வருக்கு ரா... மேலும் பார்க்க

தவறான தகவல்களைப் பரப்பும் பாகிஸ்தான்: சோஃபியா குரேஷி

பாகிஸ்தான் பல்வேறு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்துவந்த போர்ப் பதற்றம் இன்று மாலை 5 மணி முதல் முடிவுக்கு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது- விங் கமாண்டர் வியோமிகா சிங்

பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது என்று விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த விளக்கத்தில், இந்தியா எந்தவொரு ... மேலும் பார்க்க

ராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்: ஜெய்சங்கர்

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையை நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் சந்திப்பு

போர் நிறுத்த அறிப்பைத் தொடர்ந்து பிரதமர் மோடியை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் ... மேலும் பார்க்க