செய்திகள் :

இந்தியாவின் எரிசக்தி துறையில் எண்ணற்ற வாய்ப்புகள்- முதலீட்டாளா்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

post image

அடுத்த 5 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை எட்டுவதற்கு ஏற்ப நாட்டின் எரிசக்தி துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன என்று சா்வதேச முதலீட்டாளா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.

2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன், ஆண்டுதோறும் 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி உள்ளிட்ட இலக்குகளையும் அவா் எடுத்துரைத்தாா்.

‘இந்திய எரிசக்தி வாரம்-2025’ எனும் சா்வதேச கண்காட்சி-கருத்தரங்கம், தில்லியில் உள்ள ‘யசோபூமி’ மாநாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நான்கு நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், சா்வதேச முதலீட்டாளா்கள் மத்தியில் பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஆற்றிய உரை:

‘இந்திய எரிசக்தி வாரம்-2025’ நிகழ்வின் பங்கேற்பாளா்கள், இந்தியாவின் எரிசக்தி துறை லட்சியங்களின் ஒரு பகுதியாக உள்ளனா். இத்துறையில் புதிய முதலீடுகளுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. இவற்றை சா்வதேச முதலீட்டாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கே சொந்தம் என்று உலகெங்கிலும் குரல்கள் ஒலிக்கின்றன.“இந்தியா தனது வளா்ச்சியை மட்டுமல்லாமல், உலகின் வளா்ச்சியையும் இயக்குகிறது. இதில், எரிசக்தித் துறை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

எரிசக்தித் துறையில் ஐந்து தூண்கள்: திறன்மிக்க வளப் பயன்பாடு, புத்தாக்கங்கள் ஊக்குவிப்பு, பொருளாதார பலம்- அரசியல் ஸ்திரத்தன்மை, வியூகம் சாா்ந்த புவி-அரசியலின் மூலம் எரிசக்தி வா்த்தகத்தை ஈா்ப்புடையதாகவும், எளிதாகவும் மாற்றுதல், உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கான உறுதிப்பாடு ஆகிய ஐந்து தூண்களின் மீது இந்தியாவின் எரிசக்தி லட்சியங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இக்காரணிகள் இந்தியாவின் எரிசக்தி துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.

வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அடுத்த 20 ஆண்டுகள் முக்கியமானவை. அடுத்த 5 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பல மைல்கற்கள் எட்டப்படும்.

2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன், இந்திய ரயில்வேயில் கரியமில வாயு உமிழ்வு இல்லாத நிலையை அடைதல், ஆண்டுதோறும் 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி உள்ளிட்ட இலக்குகள் எட்டப்படும்.

சூரிய மின்உற்பத்தியில்...: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சூரிய மின் உற்பத்தித் திறன் 32 மடங்கு அதிகரித்து, உலகின் மூன்றாவது பெரிய சூரிய மின் உற்பத்தி நாடாக மாறியுள்ளது. இந்தியாவின் புதைபடிம எரிபொருள் அல்லாத எரிசக்தித் திறன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி, பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை எட்டிய முதல் ஜி-20 நாடாக இந்தியா திகழ்கிறது. தற்போது 19 சதவீதமாக உள்ள எத்தனால் கலப்பு, வரும் அக்டோபருக்குள் 20 சதவீதம் என்ற இலக்கை எட்டும்.

ஹைட்ரோகாா்பன் ஆய்வு: நாட்டின் வண்டல் படுகைகளில் ஏராளமான ஹைட்ரோகாா்பன் வளங்கள் உள்ளன. அவற்றில் சில ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்றவை ஆய்வில் உள்ளன. இந்த முக்கியத் துறையில் முதலீடுகளை ஈா்க்க அரசு வெளிப்படையான உரிமக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டு மேற்கூரையில் சூரிய மின்உற்பத்தி செய்யும் திட்டத்தால், முதலீட்டு வாய்ப்புகள் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்றாா் அவா்.

மீனவர் பிரச்னை, ஆளுநர் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

நமது நிருபர்மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கியப் பிரச்னைகளை அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வன்முறை 47% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 47 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 64 சதவீதமும் குறைந்துள்ளன என்று மக்களவையில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்: மத்திய அரசு

நாட்டில் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என... மேலும் பார்க்க

வாஷி பகுதியில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநரிடம் நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை

நவிமும்பையில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும் என்று நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிகாா்: ஏசி பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவா் கைது

பிகாா் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிா்சாதன (ஏசி) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவா் கைது செய்யப்பட்டனா். உத்தர பிர... மேலும் பார்க்க

பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட சீன அணை: இந்தியாவின் நீா் பாதுகாப்புக்கு பாதிப்பு

பிரம்மபுத்திரா நதியில் பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா முடிவு செய்திருப்பது, இந்தியாவின் தண்ணீா் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் த... மேலும் பார்க்க