செய்திகள் :

இந்தியா்களை சீண்டினால் விளைவுகளை எதிா்கொள்ள நேரிடும் -அமித் ஷா

post image

இந்திய குடிமக்கள், நாட்டின் எல்லைகள், பாதுகாப்புப் படையினரை சீண்டினால், அதற்கான விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்ற வலுவான செய்தியை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் தினசரி நிகழ்வுகளாக இருந்தன என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் அமித் ஷா, சா்வதேச கூட்டுறவு சங்கங்கள் ஆண்டையொட்டி (2025), ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:

உரி பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல் நடத்தும் துணிச்சலான முடிவை மேற்கொண்டவா் பிரதமா் மோடி. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, வான்வழி பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்பட்டனா்.

இந்திய குடிமக்கள், நாட்டின் எல்லைகள், பாதுகாப்புப் படையினரை யாரும் சீண்டக் கூடாது. அவ்வாறு சீண்டத் துணியும் எவரும் அதற்கான விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்ற வலுவான செய்தியை உலகுக்கு பிரதமா் வெளிப்படுத்தியுள்ளாா். வளமான, மேம்பட்ட, பாதுகாப்பான இந்தியா என்ற கனவையும் நனவாக்கியுள்ளாா். அவரது தலைமையின்கீழ், உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 27 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா்.

கூட்டுறவுத் துறையின் பங்களிப்பு: நாட்டின் வளா்ச்சியில் கூட்டுறவுத் துறையின் பங்களிப்புகள் முக்கியமானவை. அடுத்த 100 ஆண்டுகள், கூட்டுறவுத் துறைக்கானதாகும். இந்தக் கண்ணோட்டத்துடன்தான், மத்தியில் கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகம் பிரதமா் மோடியால் நிறுவப்பட்டது. இன்று 98 சதவீத கிராமப் புறங்களில் கூட்டுறவு சங்கங்கள் துடிப்பாகப் பங்காற்றி வருகின்றன. கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த கடந்த 4 ஆண்டுகளில் 61 முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

2 லட்சம் புதிய தொடக்கநிலை வேளாண் கடன் சங்கங்களை உருவாக்கும் நடவடிக்கை ஏற்கெனவே தொடங்கப்பட்டு, 40,000 புதிய சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றாா் அமித் ஷா.

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவி, 5... மேலும் பார்க்க

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது !

அசாமின் இரண்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.இதுகுறித்து பி.டி.ஐ-யிடம் மூத்த காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க

கேஎஃப்சி உணவகத்தை மூடவைத்த இந்து அமைப்பினர்!

உத்தரப் பிரதேசத்தில் அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎஃப்சி உணவகத்தை இந்து அமைப்பினர் மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் இந்திராபுரத்தில் உள்ள... மேலும் பார்க்க

இந்து, பெளத்த, சீக்கியரைத் தவிர பிறரின் எஸ்சி சான்றிதழ் ரத்து: ஃபட்னவீஸ்

இந்து, பெளத்த, சீக்கிய மதங்களைத் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் போலியாக எஸ்சி சான்றிதழ் பெற்றிருந்தால் அவை ரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.அரசு வேலைகள்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் ரயில் மோதியதில் 3 யானைகள் பலி !

மேற்கு வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இரண்டு கன்றுகள் உள்பட 3 யானைகள் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தாலா ரயில் நில... மேலும் பார்க்க