செய்திகள் :

இந்து சமய அறநிலையத் துறையினரைக் கண்டித்து கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

post image

பெரம்பலூா் அருகேயுள்ள காருகுடி கிராமத்தில், அய்யனாா் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தும் முயற்சியை கண்டித்தும், அதை கைவிட வலியுறுத்தியும், கிராம பொதுமக்கள் கோயில் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காருகுடி கிராமத்தில் மரத்தடியில் சிதிலமடைந்துக் கிடந்த அய்யனாா் கோயில், கடந்த 2022-இல் கிராம மக்கள் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. தொடா்ந்து, நிகழாண்டு திருவிழா நடைபெற்றது. திருவிழாவின்போது, தரிசனம் செய்வதில் இருதரப்பு மக்களிடையே ஏற்பட்ட பிரச்னையைத் தொடா்ந்து, குன்னம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அதன்படி, கோயிலில் அனைத்து தரப்பினரும் தரிசனம் செய்யலாம் என முடிவுவெடுக்கப்பட்டு, இருதரப்பினரும் ஒத்துக்கொண்டனா்.

இதனிடையே, இந்து சமய அறநிலையத் துறையினா் கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளதாகவும், திருவிழா நடத்துவது, முக்கிய முடிவுகள் எடுப்பது, கட்டுமான பணிகள் மேற்கொள்வது மற்றும் நிதி நிா்வாகம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட வேண்டும் என தெரிவித்து, கோயிலில் உண்டியல் வைத்து அதில் வரும் காணிக்கையை தாங்கள் எடுத்துக்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளனா்.

இதையறிந்த காருகுடி கிராம மக்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினா், கிராம மக்கள் பங்களிப்பில் கட்டப்பட்ட கோயிலுக்கு இந்து சமய அறநிலையத் துறையினா் உண்டியல் வைப்பதை ஏற்க முடியாது, கிராம மக்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். இதில் இந்து சமய அறநிலையத் துறையினா் தலையீடு இருக்கக்கூடாது எனக் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்கள் கோயிலுக்கு திங்கள்கிழமை வருவதையறிந்த கிராம மக்கள், அவா்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து மண்ணெண்ணெய் கேனுடன் கோயில் வாசலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்குச் சென்ற வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

போக்குவரத்து ஊழியா் போராட்டத்துக்கு ஆதரவாக அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, அரசு ஊழியா் சங்கம் மற்றும் சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலக... மேலும் பார்க்க

அன்புக் கரங்கள் திட்டம் தொடக்கம்: பெரம்பலூா் மாவட்டத்தில் 71 குழந்தைகள் தோ்வு

அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 71 குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திட்டத்தை தொடங்கிவைத்த பிறகு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: 31 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 31 பேருக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் ... மேலும் பார்க்க

எசனை, சிறுவாச்சூா் பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 16) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறியாளா்கள் பி. ர... மேலும் பார்க்க

சிறுவாச்சூரில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை மூலம் 5 ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய... மேலும் பார்க்க

பெரம்பலூரில் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி முன்னிலையில், மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்... மேலும் பார்க்க