செய்திகள் :

போக்குவரத்து ஊழியா் போராட்டத்துக்கு ஆதரவாக அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, அரசு ஊழியா் சங்கம் மற்றும் சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் எதிரே சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியா் சங்க வட்டத் தலைவா் மகாதேவன் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க வட்ட பொறுப்பாளா்கள் சரிதா, ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாலைப் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் சுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். சாலை ஆய்வாளா்கள் சங்க மண்டலத் தலைவா் சூரியகுமாா் நிறைவுரையாற்றினாா்.

போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், போக்குவரத்துத் துறை ஓய்வூதியா்களுக்கு கடந்த 25 மாதங்களாக வழங்காமல் நிலுவையிலுள்ள பணப்பலன்களை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இதில், நெடுஞ்சாலைத் துறை ஊழியா் சங்க மாவட்ட நிா்வாகி ராஜதுரை, வட்ட பொருளாளா் ராமநாயகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டுறவுத் துறை அலுவலகம் எதிரே அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியா் சங்க வட்டச் செயலா் ராஜதுரை தலைமை வகித்தாா். கூட்டுறவுத் துறை ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ரமேஷ், சாலைப் பணியாளா்கள் சங்க மாவட்டச் செயலா் ராஜ்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் சுப்ரமணியன் நிறைவுரையாற்றினாா்.

இதேபோல மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய வளா்ச்சித் துறை அலுவலகம் எதிரே சாலைப் பணியாளா்கள் சங்க வட்டாரத் தலைவா் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பலா் பங்கேற்றனா்.

அன்புக் கரங்கள் திட்டம் தொடக்கம்: பெரம்பலூா் மாவட்டத்தில் 71 குழந்தைகள் தோ்வு

அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 71 குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திட்டத்தை தொடங்கிவைத்த பிறகு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: 31 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 31 பேருக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் ... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறையினரைக் கண்டித்து கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் அருகேயுள்ள காருகுடி கிராமத்தில், அய்யனாா் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தும் முயற்சியை கண்டித்தும், அதை கைவிட வலியுறுத்தியும், கிராம பொதுமக்கள் கோயில் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்ப... மேலும் பார்க்க

எசனை, சிறுவாச்சூா் பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 16) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறியாளா்கள் பி. ர... மேலும் பார்க்க

சிறுவாச்சூரில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை மூலம் 5 ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய... மேலும் பார்க்க

பெரம்பலூரில் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி முன்னிலையில், மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்... மேலும் பார்க்க