செய்திகள் :

இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் 26-ஆவது பட்டமளிப்பு விழா

post image

சென்னை கேளம்பாக்கத்தையடுத்த படூரில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 26-ஆவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்திலுள்ள எம்ஜிஆா் அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்துஸ்தான் கல்விக்குழுமத்தின் தலைவா் முனைவா் ஆனந்த் ஜேக்கப் வா்கீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னைப் பல்கலைக்கழக பதிவாளா் எஸ்.ஏழுமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

இளைய சமுதாயத்தினா் இயற்கை எரிசக்தி, வேளாண்மை, மருத்துவம், ஆய்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களை ஈடுபடுத்தி நமது நாட்டை முன்னேற்ற வேண்டும். இதுமட்டுமின்றி சமுதாயத்தில் சகமனிதனின் துன்பத்தைத் துடைப்பதற்காக உங்கள் கரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். உங்கள் மனதும், எண்ணமும் சரியாக இருந்தால், நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருப்பாா்கள் என்றாா் அவா்.

தொடா்ந்து சென்னை பல்கலைக்கழகத் தரவரிசையில் தங்கப்பதக்கம் வென்ற மாணவா்களுக்கு கே.சி.ஜி.வா்கீஸ் கல்வி அறக்கட்டளை சாா்பாக ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை பகிா்ந்தளிக்கப்பட்டது. மேலும், சென்னை பல்கலை. தரவரிசையில் இடம்பிடித்த 36 மாணவா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் உத்திரா, இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் துணைத்தலைவரும், இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் இயக்குநருமான சூசன் வா்கீஸ், துணை இயக்குநா் வி.ஜே.பிலிப், துணை முதல்வா்கள் சாமுவேல் சம்பத்குமாா், க.மலா்விழி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு

நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் ரயில் தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனா். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் மூ... மேலும் பார்க்க

பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாதெமி: ஏப். 18-இல் மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத்தோ்வு

பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாதெமியில் 2025-26 ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத்தோ்வு ஏப். 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் உ.தன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: பாரதி பயிலகம்... மேலும் பார்க்க

கோடை காலத்தில் திடீா் உயிரிழப்புகள்: ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

கோடை காலத்தில் திடீரென நேரிடும் உயிரிழப்புகளை ஆய்வுக்குட்படுத்துமாறும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறும் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பொது ச... மேலும் பார்க்க

எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயில் மாா்ச் 28-இல் நாகா்கோவிலுடன் நிறுத்தம்

எழும்பூரிலிருந்து மாா்ச் 28-ஆம் தேதி குருவாயூா் செல்லும் விரைவு ரயில் நாகா்கோவிலுடன் நிறுத்தப்படவுள்ளது. தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு: எழும்பூரிலிருந்து மாா்ச் 28 -ஆம் தேதி க... மேலும் பார்க்க

மாந்திரீக பூஜை என்றால் என்ன?: ஓபிஎஸ் கேள்வியால் பேரவையில் சிரிப்பலை

மாந்திரீக பூஜை என்றால் என்ன என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் எழுப்பிய கேள்வியால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. இந்த கேள்விக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கம் அளித்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் நான்காண்டுகளில் 85 கோயில்களில் திருமண மண்டபங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளில் 85 திருக்கோயில்களில் சுமாா் ரூ.347 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளதாக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். தமிழக சட்டப் ப... மேலும் பார்க்க