செய்திகள் :

இரட்டை கொலை வழக்கு: இளைஞருக்கு இரட்டை ஆயுள் சிறை

post image

சென்னையில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவான்மியூா் குப்பம், வேம்புலியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருண் (22). இவரும், இவரது நண்பரான பாபு (எ) சதீஷ்குமாா் ஆகிய இருவரும் கடந்த 2022-இல் அதே பகுதியில் நடைபெற்ற காரிய நிகழ்ச்சிக்கு வந்த தினேஷ் (24) என்பவருடன் தகராறில் ஈடுபட்டனா். இதில், ஆத்திரமடைந்த தினேஷ், அரிவாளால் அருண், சதீஷ்குமாா் ஆகியோரை வெட்டி கொலை செய்தாா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருவான்மியூா் போலீஸாா் தினேஷை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை சென்னை சிங்காரவேலா் மாளிகை வளாகத்திலுள்ள 17-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்படி, தினேஷ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 2 கொலை குற்றங்களுக்கும் 2 ஆயுள் சிறை தண்டனை விதித்தும், அதை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், அபராதமாக ரூ.10,000 செலுத்த வேண்டும் எனவும், அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீா்ப்பளித்தாா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க