செய்திகள் :

இரண்டாம் நாளிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை; பிசிசிஐ கூறுவதென்ன?

post image

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாளிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யாதது, பேட்டிங்கில் அவர் களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 353 ரன்கள் எடுத்துள்ளது.

பிசிசிஐ கூறுவதென்ன?

பந்தினை தடுக்க முயன்று கை விரலில் காயம் ஏற்பட்டதால், முதல் நாள் ஆட்டத்தின் நடுவே ரிஷப் பந்த் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவருக்குப் பதிலாக துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் செய்தார்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 11) இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துருவ் ஜுரெலே இன்றும் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். இதன் மூலம், ரிஷப் பந்த்துக்கு காயம் இன்னும் சரியாகவில்லை என்பது தெரிகிறது.

இருப்பினும், முதல் இன்னிங்ஸில் அவர் பேட்டிங் செய்வாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ரிஷப் பந்த்தின் காயம் தொடர்பாக பிசிசிஐ தெரிவித்திருப்பதாவது: ரிஷப் பந்த்தின் இடது கையின் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவரை பிசிசிஐ-ன் மருத்துக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் நாள் காலையில் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட ரிஷப் பந்த் முயற்சித்துள்ளார். ஆனால், அவரால் முழுமையாக பயிற்சிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதன் காரணமாகவே அவர் இன்று கீப்பிங் செய்யவில்லை.

காயம் காரணமாக விக்கெட் கீப்பிங் செய்யாமலிருக்கும் ரிஷப் பந்த், முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் களமிறக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Rishabh Pant did not keep wickets on the second day of the third Test against England.

இதையும் படிக்க: 37-வது சதம் விளாசிய ஜோ ரூட்; ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித் சாதனை முறியடிப்பு!

லார்ட்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா; இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று ... மேலும் பார்க்க

எனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ்: நிதீஷ் ரெட்டி

இந்திய வீரர் நிதீஷ் ரெட்டி தனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ் எனக் கூறியுள்ளார். இந்தியாவின் ஆல் ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி இந்தியாவுக்கு கடந்த பிஜிடி தொடரில் டெஸ்ட்டில் அறிமுகமா... மேலும் பார்க்க

ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்; குறுகிய இடைவெளியில் 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் குறுகிய இடைவெளியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அசத்தினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்க... மேலும் பார்க்க

37-வது சதம் விளாசிய ஜோ ரூட்; ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித் சாதனை முறியடிப்பு!

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவரது 37-வது சதத்தைப் பதிவு செய்தார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று (ஜூலை 10) தொடங்கியது. ... மேலும் பார்க்க

அழுத்தத்தைக் கையாள்வதை தோனியிடம் கற்றுக் கொண்டேன்: தீப்தி சர்மா

அழுத்தத்தைக் கையாள்வதை தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் ஆல்ரவுண்டரான தீப்தி சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறார்.... மேலும் பார்க்க

இந்திய அணியில் நிதீஷ் குமார் தொடர்ந்து இடம்பெற வேண்டும்: அனில் கும்ப்ளே

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டரான நிதீஷ் குமார் ரெட்டி தொடர்ந்து இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக... மேலும் பார்க்க