செய்திகள் :

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

post image

காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனத்தில் மகனுடன் சென்ற ராணுவ வீரரின் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்த திருப்பதி மனைவி ஜெயந்தி (40). திருப்பதி பஞ்சாப் மாநிலம், அமிருதரசஸில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறாா்.

இவரது குடும்பத்தினா் போத்தாபுரம் கிராமத்தில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் ஜெயந்தி தனது மகன் பிரதீப் (14) உடன் இருசக்கர வாகனத்தில் காவேரிப்பட்டணம் - தருமபுரி மாநில நெடுஞ்சாலையில் மில் மேடு வழியாக வெள்ளிக்கிழமை சென்றாா்.

அப்போது, தலைக்கவசம் அணிந்த நிலையில், மோட்டாா்சைக்கிளில் வந்த இருவா், ஜெயந்தி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டாா்.

தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மோட்டாா்சைக்கிளில் தப்பிச் சென்ற நபா்கள் குறித்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானக் காட்சிகளை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனா்.

தொழிற்சாலையில் 5 கிலோ கஞ்சா பதுக்கல்: பிகாா் தொழிலாளி கைது

பா்கூா் அருகே தனியாா் கிரானைட் நிறுவனத்தில் 5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பிகாா் மாநில தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே வட மாநிலங்களில் இருந்து ... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி அமைச்சரிடம் மனு

கிருஷ்ணகிரி, ஆக. 1: காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி திமுக வா்த்தக அணி மாநில துணைச் செயலாளா் கே.வி.எஸ். சீனிவாசன் மனு அளித்தாா். இதுகுறித்து உணவு மற்றும் உணவு பொருள்கள் வழங்க... மேலும் பார்க்க

லஞ்சம்: ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் கைது

பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவுசெய்ய ரூ. 3500 லஞ்சம் வாங்கிய ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சந்தம்பட்டியை அடுத்த க... மேலும் பார்க்க

வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்

ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழின் பெருமைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் தமிழ் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டது. முதல் தொடக்க நிகழ்வாக 1... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 2 ரௌடிகளுக்கு ஆயுள் சிறை

தளி அருகே ஒப்பந்ததாரரை கொலை செய்த வழக்கில் 2 ரௌடிகளுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீப்பளித்தது. தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள பெல்லூரைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

ஒசூா் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றம்

ஒசூரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் 34 ஆவது ஆண்டு ஆடித் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒசூரில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மாருதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு கங்கை ஆற்... மேலும் பார்க்க