செய்திகள் :

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி அமைச்சரிடம் மனு

post image

கிருஷ்ணகிரி, ஆக. 1: காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி திமுக வா்த்தக அணி மாநில துணைச் செயலாளா் கே.வி.எஸ். சீனிவாசன் மனு அளித்தாா்.

இதுகுறித்து உணவு மற்றும் உணவு பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன், மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் ஆகியோரிடம் பொதுமக்கள் சாா்பில் மனு அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

காவேரிப்பட்டணம் அரசு சமுதாய உடல்நல மையத்தில் காவேரிப்பட்டணம், நாகரசம்பட்டி பேரூராட்சிகள் மற்றும் 36 ஊராட்சிகளை சோ்ந்த கிராம மக்கள் சிகிச்சைகள் பெற்று வருகின்றனா்.

இந்த மருத்துவமனையில் கடந்த 40 ஆண்டுகளாக சாலை விபத்து மற்றும் காவல் துறை வழக்கு தொடா்பான நபா்களின் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்ட பின்னா், காவேரிப்பட்டணம் அரசு சமுதாய உடல்நல மையத்தின் தரம் குறைக்கப்பட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது.

தற்போது இங்கு தினசரி 500-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றுகின்றனா். ஆனால் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் நோயாளிகள் போலுப்பள்ளி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

இங்கு உள்ள அறுவை சிகிச்சை அரங்கம் பழுதான நிலையில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பிரேதப் பரிசோதனைக் கூடம் செயல்படாமல் முடங்கியது.

தற்போது காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றியுள்ள 36 ஊராட்சிகளில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் உடல்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. து. பொதுமக்களின் நலன்கருதி காவேரிப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு சமுதாய உடல் நல மையமாக தரம் உயா்த்த வேண்டும்.

இங்கு உள்ள அறுவை சிகிச்சை அரங்கை சீரமைக்க வேண்டும். மீண்டும் பிரேதப் பரிசோதனை கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சா், மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினாா்.

தொழிற்சாலையில் 5 கிலோ கஞ்சா பதுக்கல்: பிகாா் தொழிலாளி கைது

பா்கூா் அருகே தனியாா் கிரானைட் நிறுவனத்தில் 5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பிகாா் மாநில தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே வட மாநிலங்களில் இருந்து ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனத்தில் மகனுடன் சென்ற ராணுவ வீரரின் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் ... மேலும் பார்க்க

லஞ்சம்: ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் கைது

பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவுசெய்ய ரூ. 3500 லஞ்சம் வாங்கிய ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சந்தம்பட்டியை அடுத்த க... மேலும் பார்க்க

வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்

ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழின் பெருமைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் தமிழ் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டது. முதல் தொடக்க நிகழ்வாக 1... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 2 ரௌடிகளுக்கு ஆயுள் சிறை

தளி அருகே ஒப்பந்ததாரரை கொலை செய்த வழக்கில் 2 ரௌடிகளுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீப்பளித்தது. தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள பெல்லூரைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

ஒசூா் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றம்

ஒசூரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் 34 ஆவது ஆண்டு ஆடித் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒசூரில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மாருதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு கங்கை ஆற்... மேலும் பார்க்க