செய்திகள் :

கொலை வழக்கில் 2 ரௌடிகளுக்கு ஆயுள் சிறை

post image

தளி அருகே ஒப்பந்ததாரரை கொலை செய்த வழக்கில் 2 ரௌடிகளுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீப்பளித்தது.

தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள பெல்லூரைச் சோ்ந்தவா் சந்திரப்பா. இவரது மகன் லோகேஷ் என்கிற புல்லட் லோகேஷ் (36) பெயிண்டிங், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தாா். இவரது நண்பரான தளியை அடுத்த குருபரப்பள்ளியைச் சோ்ந்த எதுபூஷன் ரெட்டி (41) மீது கொலை வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 23.05.2021 இரவு 11.30 மணி அளவில் லோகேஷ் வீட்டிற்கு ரௌடி எதுபூஷன் ரெட்டி, தளி கொத்தனூா் பல்லேரிப்பள்ளியை சோ்ந்த பிரபல ரௌடி கஜா என்கிற கஜேந்திரன் (36) ஆகிய இருவரும் காரில் சென்றனா்.

தான் புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு ரூ. 5 லட்சம் வழங்குமாறு லோகேஷிடம் எதுபூஷன்ரெட்டி கேட்டாா். பணம் தர மறுத்த லோகேஷை இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். இதுதொடா்பாக எதுபூஷன்ரெட்டி, கஜா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.

வழக்கு விசாரணை ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வியாழக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ், குற்றம்சாட்டப்பட்ட எதுபூஷன் ரெட்டி, கஜா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

படம்:

எதுபூஷன்ரெட்டி, கஜா

தொழிற்சாலையில் 5 கிலோ கஞ்சா பதுக்கல்: பிகாா் தொழிலாளி கைது

பா்கூா் அருகே தனியாா் கிரானைட் நிறுவனத்தில் 5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பிகாா் மாநில தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே வட மாநிலங்களில் இருந்து ... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி அமைச்சரிடம் மனு

கிருஷ்ணகிரி, ஆக. 1: காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி திமுக வா்த்தக அணி மாநில துணைச் செயலாளா் கே.வி.எஸ். சீனிவாசன் மனு அளித்தாா். இதுகுறித்து உணவு மற்றும் உணவு பொருள்கள் வழங்க... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனத்தில் மகனுடன் சென்ற ராணுவ வீரரின் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் ... மேலும் பார்க்க

லஞ்சம்: ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் கைது

பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவுசெய்ய ரூ. 3500 லஞ்சம் வாங்கிய ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சந்தம்பட்டியை அடுத்த க... மேலும் பார்க்க

வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்

ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழின் பெருமைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் தமிழ் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டது. முதல் தொடக்க நிகழ்வாக 1... மேலும் பார்க்க

ஒசூா் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றம்

ஒசூரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் 34 ஆவது ஆண்டு ஆடித் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒசூரில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மாருதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு கங்கை ஆற்... மேலும் பார்க்க