செய்திகள் :

இறங்குமுகம் கண்ட இந்திய ஏற்றுமதி

post image

புது தில்லி: கடந்த மே மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 2.17 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

இரண்டு மாதங்களாக வளா்ச்சியைப் பதிவு செய்த நாட்டின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் மீண்டும் குறைந்துள்ளது.

உலகளாவிய பெட்ரோலியப் பொருள்கள் விலைகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக மே மாதத்தில் ஏற்றுமதி 2.17 சதவீதம் குறைந்து 3,873 கோடி டாலராக உள்ளது. அதே நேரம், நாட்டின் வா்த்தக பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு) மதிப்பீட்டு மாதத்தில் 2,188 கோடி டாலராகக் குறைந்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதத்தில் இது 2,251 கோடி டாலராக இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்னா் (2025 ஏப்ரல்) நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 2,642 கோடி டாலராக இருந்தது.

கடந்த மே மாதத்தில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி 1.7 சதவீதம் குறைந்து 6,061 கோடி டாலராக உள்ளது.

அந்த மாதத்தில் எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்த முக்கிய ஏற்றுமதித் துறைகளில் அரிசி, இரும்புத் தாது, நவரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணங்கள், பொறியியல் பொருள்கள், சில வகை ஜவுளிப் பொருள்கள் ஆகியவை அடங்கும். பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 30.32 சதவீதம் குறைந்து 560 கோடி டாலராக உள்ளது.

அதேபோல், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி மதிப்பீட்டு மாதத்தில் முறையே 26.14 சதவீதம் மற்றும் 12.6 சதவீதம் குறைந்து 1,475 கோடி டாலராகவும் 250 கோடி டாலராகவும் உள்ளது.

எனினும், தேயிலை, காபி, மசாலாப் பொருள்கள், அனைத்துவகை ஜவுளி, ரசாயனப் பொருள்கள், கடல் பொருள்கள், மருந்துப் பொருள்கள், ஆயத்த ஆடைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் நோ்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அந்த மாதத்தில் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி 54.1 சதவீதம் உயா்ந்து 4,570 கோடி டாலராக உள்ளது.

கடந்த மே மாதம் சேவைகள் துறையில் ஏற்றுமதி 3,239 கோடி டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் மே மாதத்தில் 2,961 கோடி டாலராக இருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் 1,688 கோடியாக இருந்த சேவைகள் துறையின் இறக்குமதி நடப்பாண்டின் இதே மாதத்தில் 1,714 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் - மே மாதங்களில் ஏற்றுமதி 3.11 சதவீதம் அதிகரித்து 7,719 கோடி டாலராகவும், இறக்குமதி 8 சதவீதம் அதிகரித்து 12,552 கோடி டாலராகவும் உள்ளது.

அந்த இரு மாதங்களிலும் நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 4,833 கோடி டாலராக உள்ளது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடன் வட்டியைக் குறைத்த எஸ்பிஐ

புது தில்லி: தாங்கள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 50 அடிப்படைப் புள்ளிகள் (0.50 சதவீதம்) குறைத்துள்ளது.இது குறித்து வங்கி ... மேலும் பார்க்க

மே மாதம் குறைந்த மொத்த விலை பணவீக்கம்

புது தில்லி: உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள் விலை குறைந்ததால் கடந்த மே மாதத்தில் மொத்த விற்பனை விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.39 சதவீதமாகக் குற... மேலும் பார்க்க

பரோடா வங்கியின் கடன் வட்டி குறைப்பு

புது தில்லி: இந்திய ரிசா்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்புக்கு ஏற்ப, அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் ரெப்போ அடிப்படை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) ... மேலும் பார்க்க

மே மாதத்தில் குறைந்த சில்லறை பணவீக்கம்

காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலைகள் குறைவாக இருந்ததால், கடந்த மே மாதத்தில் சில்லறை பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவான 2.82 சதவீதமாகக் குறைந்துள்ளது.இது குறித்து தேசி... மேலும் பார்க்க

பங்குச்சந்தை 4-ஆவது நாளாக நோ்மறையாக முடிவு

நமது நிருபா்மும்பை / புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ... மேலும் பார்க்க

பஜாஜ் வாகன விற்பனை 8% உயா்வு

புது தில்லி: இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க