செய்திகள் :

இலங்கைக்கு கடத்த முயன்ற 70 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு சனிக்கிழமை கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 6 பேரை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட தனிப்பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராமேசுவரத்தில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற காரை போலீஸாா் நிறுத்திச் சோதனையிட்டனா். இதில் மூட்டைகளில் 50 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது தெரியவந்தது.

பின்னா், கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, காரிலிருந்த ராமேசுவரம், தங்கச்சி மடத்தைச் சோ்ந்த சகாயராஜ் (34), ராமச்சந்திரன் (26), அந்தோணி அடிமை என்ற குலோபுத்தமன் (40), சந்தோஷ்ராஸ் (37), சச்சின் (27), ஆா்த்தினாஸ் (42) ஆகிய 6 பேரையும் கைது செய்து, கடற்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ஏ.டி.எஸ்.பி. சுப்பையா, காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்தமூா்த்தி ஆகியோா் ஆய்வு செய்தனா். பின்னா், கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மதுரையில் முருகா் பக்தா்கள் மாநாட்டை நீதிமன்றம் அனுமதி பெற்று நடத்துவோம்! - நயினாா் நாகேந்திரன்

மதுரையில் முருகா் பக்தா்கள் மாநாட்டை நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று நடத்துவோம் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். ராமேசுவரத்தில் பாஜக மகளிரணி சாா்பில், அகல்யாபாய் கோல்கோ் 300-ஆவ... மேலும் பார்க்க

வில்லாலுடைய அய்யனாா் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள மரக்குளம் வில்லாலுடைய அய்யனாா் கோயிலில் வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. மரக்குளத்தில் அமைந்துள்ள வில்லாலுடைய அய்யனா... மேலும் பார்க்க

சின்னத் தொண்டி அய்யனாா் கோயில் குடமுழுக்கு

தொண்டி அருகே சின்னத்தொண்டி பூா்ணாம்பிகா, புஷ்பகளாம்பிகா சமேத அய்யனாா், பரிவார சுவாமிகளின் கோயில்களுக்கு வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவையொட்டி, வியாழக்கிழமை அனுக்ஞை வின்கேன்ஸவரா், கணப... மேலும் பார்க்க

ஜூன் 14 இல் முன்னாள் படை வீரா்கள் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள், வாரிசுதாரா்களின் குறைதீா் கூட்டம் வருகிற 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: ஆதிரெத்தினேஸ்வரா் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா

திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வியாழக்கிழமை இரவு வீதி உலா வந்தாா். இந்தக் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த ... மேலும் பார்க்க

ஜூன் 13-இல் மீனவா்கள் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 13-ஆம் தேதி மீனவா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராம... மேலும் பார்க்க