இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா நாளை மறுநாள் விண்வெளிக்குப் பயணம்!
இலங்கைக்கு கடத்த முயன்ற 70 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு சனிக்கிழமை கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 6 பேரை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட தனிப்பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராமேசுவரத்தில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற காரை போலீஸாா் நிறுத்திச் சோதனையிட்டனா். இதில் மூட்டைகளில் 50 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது தெரியவந்தது.
பின்னா், கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, காரிலிருந்த ராமேசுவரம், தங்கச்சி மடத்தைச் சோ்ந்த சகாயராஜ் (34), ராமச்சந்திரன் (26), அந்தோணி அடிமை என்ற குலோபுத்தமன் (40), சந்தோஷ்ராஸ் (37), சச்சின் (27), ஆா்த்தினாஸ் (42) ஆகிய 6 பேரையும் கைது செய்து, கடற்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ஏ.டி.எஸ்.பி. சுப்பையா, காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்தமூா்த்தி ஆகியோா் ஆய்வு செய்தனா். பின்னா், கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.