செய்திகள் :

இலங்கைக்கு கடத்தவிருந்த 2,400 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

post image

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 2,400 கிலோ பீடி இலை பண்டல்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.

கீழக்கரையைச் சுற்றியுள்ள கடற்கரை வழியாக இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படவிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, கீழக்கரை தனிப் பிரிவு உதவி ஆய்வாளா் முத்துசெல்வம், உளவுப் பிரிவு முதல் நிலைக் காவலா் பாலமுருகன், திருப்புல்லாணி முதல் நிலைக் காவலா் வேல்முருகன் ஆகியோா் செங்கல நீரோடைப் பகுதி கடற்கரைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றனா். இவா்களைக் கண்டதும் சிலா் அங்கிருந்த தப்பிச் சென்றனா்.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் நின்றுகொண்டிருந்த சரக்கு வேனில் சோதனை செய்தனா். அதில் தலா 30 கிலோ எடையிலான 80 பீடி இலை பண்டல்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பீடி இலை பண்டல்களுடன் சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீஸாா், கீழக்கரை காவல் நிலையத்தில் அவற்றை ஒப்படைத்தனா்.

விசாரணையில், நாமக்கல் மாவட்டத்திலிருந்து கீழக்கரை பகுதிக்கு இந்தப் பீடி இலை பண்டல்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கீழக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய 8 பேரைத் தேடி வருகின்றனா்.

இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை

இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பத... மேலும் பார்க்க

மரம் வெட்டும் கருவியில் சிக்கி துண்டான கை: இளைஞருக்கு மறு சீரமைப்பு சிகிச்சை

மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், சிக்கலான மறு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் இளைஞருக்கு மறுவாழ்வு அளித்த... மேலும் பார்க்க

தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: பிரேமலதா

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். தேமுதிக மாவட்டச் செயலா்கள் கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைம... மேலும் பார்க்க

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடியில் புதிய கட்டடம்: பிப்.28-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடி செலவில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை பிப். 28-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.ச... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரம் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கு: பிப்.12-இல் தீா்ப்பு

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கில் பிப்.12- இல் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கவுள்ளது. இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை 2,961-ஆக உயா்வு: வனத் துறை அமைச்சா் க.பொன்முடி

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961-ஆக உயா்ந்துள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். மேலும், யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறி... மேலும் பார்க்க