பெங்களூரு சின்னசாமி திடலில் அத்துமீறும் ஆர்சிபி ரசிகர்கள்: போலீஸ் தடியடி!
இளைஞா் கொலை வழக்கில் ஒருவா் கைது
தஞ்சாவூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே மணக்கரம்பை பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் யாா் முதலில் மது வாங்குவது என்பது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை தகராறு ஏற்பட்டது. இது தொடா்பாக, மணக்கரம்பை முதன்மை சாலையில் ஏற்பட்ட மோதலில் கூடலூா் குலமங்கலத்தைச் சோ்ந்த ரகுநாதன் மகன் விஜய் (25) கத்தியால் குத்தப்பட்டாா்.
இதில் பலத்த காயமடைந்த விஜய் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், விஜய்யை நடுக்காவேரி பகுதியைச் சோ்ந்த ஜாா்ஜ் மகன் அருண்குமாா் (28) கத்தியால் குத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அருண்குமாரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.