செய்திகள் :

இளைஞா் கொலை வழக்கு: மனைவி உள்பட 2 போ் கைது

post image

சென்னை பெரும்பாக்கத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவி உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

பெரும்பாக்கம் எழில் நகா் 10- ஆவது பிளாக், 2-ஆவது மாடியில் வசித்தவா் பழனிசாமி (36). சமையல் எரிவாயு விநியோக ஊழியா். இவா், அந்தப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் தலையில் பலத்த காயங்களுடன் கடந்த 19-ஆம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து பெரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பழனிசாமியின் மனைவி வீரலட்சுமியிடம் விசாரணை நடத்தினா். மேலும், கைப்பேசி தொடா்புகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில் பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் என்பவருடன் அடிக்கடி வீரலட்சுமி பேசியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அசோக்குமாரைப் பிடித்து நடத்திய விசாரணையில், அவருக்கும் வீரலட்சுமிக்கும் இடையே முறையற்ற உறவு இருப்பதும், இதையறிந்த பழனிசாமி, மனைவியிடம் தகராறு செய்து வந்ததும், சம்பவத்தன்று இரவு மது போதையில் பழனிசாமி தகராறு செய்து வீரலட்சுமியை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து அசோக்குமாரிடம் வீரலட்சுமி கூறியுள்ளாா். அங்கு வந்த அசோக்குமாா், பேருந்து நிறுத்தத்தில் மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த பழனிசாமி தலை மீது இரு பெரிய கற்களை போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வீரலட்சுமி, அசோக்குமாா் ஆகிய இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மக்களுக்கு எச்சரிக்கை! சென்னையில் 3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து!

சென்னை மாநகராட்சியில் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு

பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (6... மேலும் பார்க்க

ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

பெருங்குடியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா். பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பண... மேலும் பார்க்க

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க