செய்திகள் :

இளையராஜா தொடர்ந்த வழக்கில் வனிதா பதிலளிக்க உத்தரவு!

post image

இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த மிஸஸ் & மிஸ்டர் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் மற்றும் செஃப் தாமு, பவர்ஸ்டார் சீனிவாசன், ஷகீலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். வனிதாவின் மகள் ஜோவிகாவே படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், மிஸஸ் & மிஸ்டர் படத்தில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி வைத்திருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இளையராஜா தொடர்ந்திருக்கும் வழக்கில், மைக்கேல் மதன காமராஜன் படத்தில் தான் இசையமைத்திருந்த `ராத்திரி சிவராத்திரி’ பாடலை, வனிதா விஜயகுமாரின் படத்தில் தன்னுடைய அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, வனிதா விஜயக்குமார் தரப்பை ஒரு வார காலத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

The Madras High Court on Monday ordered actress Vanitha Vijayakumar to respond to a case filed by music composer Ilayaraja.

இதையும் படிக்க : நடிகை சரோஜா தேவி காலமானார்!

பிடிவாரண்ட் வழக்குகள் எத்தனை நிலுவை? காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிம... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே விஷ காய் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி அருகே விஷ காய் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வேப்பனப்பள்ளியை அடுத்த பில்லன குப்பம், கே.திப்பனப்பள்ளி கிராமம் சிவசக்தி நகரைச் சே... மேலும் பார்க்க

வாய்ப்பளித்தால் அதிமுகவுடன் நிபந்தனையின்றி இணைப்பு: ஓபிஎஸ் அறிவிப்பு!

அதிமுகவுடன் உரிமை மீட்புக் குழுவை இணைக்க வாய்ப்பிருந்தால் எந்த நிபந்தனையும் இன்றி இணைவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலின்போது அதிமுக தனித்துப் போட்டியிட்ட... மேலும் பார்க்க

தமிழக எம்.பி.-எம்எல்ஏக்களின் ஊழல் வழக்கு: விவரங்களைக் கோரி தவெக மனு!

தமிழகத்தில் உள்ள எம்.பி.- எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை காலை 5.55 மணிக்கு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ... மேலும் பார்க்க

ஒரு பாட்டில் விஷம் கொடுத்தால் செத்துப்போயிருப்பேன்: வைகோவுக்கு மல்லை சத்யா எதிர்வினை!

ஒரு பாட்டில் விஷம் கொடுத்தால் செத்துப்போயிருப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா எதிர்வினையாற்றி பதிவிட்டுள்ளார்.மதிமுக முதன்மைச் செயலர் துரை ... மேலும் பார்க்க